Saturday, April 27, 2024
மேலும்
    Homeசெய்திகள்தமிழ்நாடுமாணவர்கள் படிக்கட்டில் தொங்கினால் அவர்களின் பெற்றோர்கள் மீதும் நடவடிக்கை

    மாணவர்கள் படிக்கட்டில் தொங்கினால் அவர்களின் பெற்றோர்கள் மீதும் நடவடிக்கை

    மாணவர்கள் படிக்கட்டில் தொங்கினால் அவர்களின் பெற்றோர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் என விழுப்புரம் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் எச்சரிக்கை செய்துள்ளார். 

    பேருந்து படிக்கட்டில் தொங்கிக் கொண்டு பயணம் செய்தால் மாணவர்கள் மட்டுமின்றி அவர்களின் பெற்றோர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க உள்ளதாக விழுப்புரம் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஸ்ரீநாதா எச்சரிக்கை செய்துள்ளார். 

    இதுகுறித்து மேலும் அவர் தெரிவித்துள்ளதாவது:

    பேருந்து படிக்கட்டில் தொங்கக் கூடாது என மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம். மேலும் அதிக பேருந்துகளை இயக்க நடவடிக்கை எடுத்துள்ளோம். பேருந்து படிக்கட்டில் பயணம் மேற்கொண்டால் மாணவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். ஆசிரியர், பெற்றோர் மீதும் நடவடிக்கை எடுக்க உள்ளோம். 

    இவ்வாறு, அவர் தெரிவித்துள்ளார்.

    இதையும் படிங்க: ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான புதிய தேதிகள் அறிவிப்பு!

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....