Wednesday, May 1, 2024
மேலும்
    Homeசெய்திகள்தமிழ்நாடு"வலுப்பெற்றது மான்டஸ் புயல்"- சென்னையில் அதிகரிக்கும் கடல் சீற்றம்..!

    “வலுப்பெற்றது மான்டஸ் புயல்”- சென்னையில் அதிகரிக்கும் கடல் சீற்றம்..!

    மாண்டஸ் புயலின் காரணமாக சென்னை மெரினா கடற்கரையில் கடல் அலைகளின் சீற்றம் அதிகமாக காணப்படுகிறது.

    தென்கிழக்கு வங்கக் கடலில் நிலைக்கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நள்ளிரவு 11.30 மணி அளவில் மாண்டஸ் புயலாக வலுப்பெற்றது. 

    இதனிடையே மணிக்கு 15 கிலோ மீட்டராக இருந்த புயலில் வேகம் தற்போது மணிக்கு 6 கிலோ மீட்டராக குறைந்துள்ளது. 

    இதன்படி சென்னையில் இருந்து தென்கிழக்கே 580 கிலோ மீட்டர் தொலைவிலும், காரைக்காலில் இருந்து கிழக்கு-தென்கிழக்கே 500 கிலோ மீட்டர் தொலைவிலும் புயல் மையம் கொண்டுள்ளது. 

    மாண்டஸ் புயலில் வட தமிழகம் புதுச்சேரி, தென் ஆந்திர மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும் என்றும், மாண்டஸ் புயல் கரையை கடக்கும் நேரத்தில் மணிக்கு 85 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. 

    மாண்டஸ் புயல் கரையை கடப்பதில் தாமதம் ஏற்படலாம்! வானிலை ஆய்வு மையம்

    அதன்படி, சென்னை உள்ளிட்ட பல பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. மேலும் மாண்டஸ் புயலின் காரணமாக தரைக்காற்று மற்றும் கடல் அலையின் சீற்றம் அதிகரித்துள்ளது. அதே சமயம் குளிரும் நிலவி வருகிறது. 

    இந்நிலையில், இன்று நள்ளிரவு முதல் தரைக்காற்று மற்றும் கடல் சீற்றம் மேலும் அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.               

    இதனிடையே சென்னை மெரினா கடற்கரையில் கடல் அலைகளின் சீற்றம் அதிகமாக காணப்படுகிறது. மேலும் மீனவர்கள் மீன் பிடிக்க கடலுக்குள் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டிருந்த நிலையில், பட்டினம்பாக்கம் மீனவர்கள் இன்று கடலுக்கு செல்லவில்லை.  

    boats pulled up on

    திடீர் உடல்நலக்குறைவால் நகைச்சுவை நடிகர் காலமானார்..                                        

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....