ஆரம்பத்திலேயே விறுவிறுப்பை ரசிகர்களிடத்தில் பற்ற வைத்திருக்கிறது, 15வது ஐபிஎல். காரணம் என்னவென்று நோக்கினால், எதிர்ப்பார்த்த அணிகளின் தோல்விதான் என்ற பதில் கிடைக்கிறது. வெற்றிப்பெறுவர் அல்லது பலம் வாய்ந்த அணி என்று கூறப்பட்ட அணிகள் தங்களது முதல் போட்டியில் தோல்வி அடைந்துள்ளது.
15வது ஐபிஎல் தொடரில் இன்னமும் ராஜஸ்தான் மற்றும் ஹைதராபாத் அணிகள்தான் தங்களின் விளையாட்டு கணக்கைத் தொடங்காமல் உள்ளன. இந்நிலையில், இன்று அந்த இரு அணிகளும் நேருக்கு நேர் போட்டியிட இருக்கின்றன.
கேன் வில்லியம்சன் தலைமையில் சன் ரைசர்ஸ் ஹைதரபாத் அணியும், சஞ்சு சாம்சன் தலைமையில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் இன்று களம் இறங்க உள்ளது. இரு அணிகளும் சரிசம பலத்துடன் இருக்கிறது. மேலும், அயல்நாட்டு வீரராக இருந்தாலும் கேன் வில்லியம்சனுக்கு ரசிகர்கள் பலர் இந்தியாவில் உள்ளனர். சஞ்சு சாம்சன் தனது கிரிக்கெட் பயணத்தில் அடுத்தக் கட்டத்தை எட்டிவிட வேண்டும் என்று எண்ணுபவர்களும் இங்கு ஏராளம்.
இரு அணிகளுமே இந்த ஐபிஎல் தொடரை வெற்றியுடன் தொடங்க ஆயுத்தமாகி வருகின்றன. சஞ்சு சாம்சன் சமீபத்தில் ” இந்த வடிவ கிரிக்கெட்டைப் பொறுத்தவரையில் அச்சமற்ற மனநிலையுடன் விளையாட வேண்டும் என்று நான் நினைக்கிறேன், இந்த வருடம் அச்சமற்ற மனநிலையுடன் விளையாடக் கூடிய வீரர்கள் இங்கு உள்ளனர். எனவே நாங்கள் அந்த மனநிலையை மைதானத்தில் சென்று வெளிப்படுத்த விரும்புகிறோம்.” என்று கூறியுள்ளது ராஜஸ்தான் அணி ரசிகர்களுக்கு பூஸ்ட்டாக அமைந்துள்ளது.
இன்று இரவு 7:30 மணிக்கு புனேவில் உள்ள மஹாராஷ்டிரா கிரிக்கெட் அசோசியேஷன் மைதானத்தில் இந்த 15 வது ஐபிஎல் தொடரில் ஐந்தாவது போட்டி நடைபெற இருக்கிறது.