Monday, April 29, 2024
மேலும்
    Homeபொழுதுபோக்குசினிமா செய்திகள்பிரபல காமெடி நடிகரின் மகன் திருப்பூர் மாவட்ட சப் கலெக்டர்! இணையத்தில் குவியும் பாராட்டுக்கள்

    பிரபல காமெடி நடிகரின் மகன் திருப்பூர் மாவட்ட சப் கலெக்டர்! இணையத்தில் குவியும் பாராட்டுக்கள்

    தமிழ்த் திரையுலகில் பிரபல நகைச்சுவை நடிகராகவும், பல குரல் கலைஞராகவும் உள்ள சின்னி ஜெயந்தின் மகன், ஸ்ருதன் ஜெய் நாராயணன் திருப்பூர் மாவட்ட துணை ஆட்சியராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். 

    நடிகர் சின்னி ஜெயந்த் 1984 ஆம் ஆண்டு ரஜினிகாந்த் நடித்த ‘கை கொடுக்கும் கை’ என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ்த்திரையுலகில் அறிமுகமானார். இவர் 300-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார்.  

    இந்நிலையில், இவரது மகனான ஜெய் நாராயணன் திருப்பூர் மாவட்ட துணை ஆட்சியராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். 

    இதையும் படிங்க:முஸ்லீம் மக்கள் அதிக அளவில் காண்டம் பயன்படுத்துகிறோம்’ – ஆர்எஸ்எஸ் தலைவருக்கு அசாதுதீன் ஒவைசி பதிலடி

    யூபிஎஸ்சி தேர்வுகள் கடந்த 2019 ஆம் ஆண்டு நடைபெற்றது. இந்தத் தேர்வு முடிவுகள் 2020 ஆம் ஆண்டு வெளியானது. இந்நிலையில், நடிகர் சின்னி ஜெயந்தின் மகனான ஸ்ருதன் ஜெய் நாராயணன் தேசிய அளவில் 75-வது இடத்தை பிடித்தார். 

    இதை அடுத்து, அவருக்கு முசோரியில் உள்ள லால் பகதூர் சாஸ்திரி நேஷனல் அகாடமி ஆப் அட்மினிஸ்ட்ரேஷன் மையத்தில் பயிற்சி அளிக்கப்பட்டது.

     இதனை, சின்னி ஜெயந்த் தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ள நிலையில், திரையுலகைச் சேர்ந்த பலரும் ரசிகர்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். 

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....