12-ம் வகுப்பு மாணவிக்கு தாலி கட்டிய வீடியோ இணையதளத்தில் வைரலாகி வருகிறது.
கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே உள்ள பேருந்து நிலையத்தின் அருகில் சுற்றியுள்ள கிராமப் பகுதிகளுக்கு செல்லும் மினி பேருந்துகளுக்கான பேருந்து நிறுத்தம் உள்ளது. இந்த பேருந்து நிறுத்தத்தில் அரங்கேறிய நிகழ்வு சமூகவலைதளங்களில் காட்டூத்தீயாக பரவி வருகிறது.
அப்படி என்ன நடந்தது என்றால், அந்த பேருந்து நிறுத்தத்தில் பள்ளிக்கூட சீருடையில் இருக்கும் மாணவி ஒருவருக்கு பாலிடெக்னிக் சீரூடையில் இருக்கும் மாணவன் ஒருவர் தாலி கட்டியுள்ளார்.
இதையும் படிங்க: பிரபல காமெடி நடிகரின் மகன் திருப்பூர் மாவட்ட சப் கலெக்டர்! இணையத்தில் குவியும் பாராட்டுக்கள்
மாணவி 12-ம் வகுப்பு படித்து வருகிறார். தாலி கட்டிய மாணவர் தனியார் பாலிடெக்னிக் ஒன்றில் படித்து வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில், இது தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் தற்போது பரவி வருகிறது.
இதைத்தொடர்ந்து, மாணவ-மாணவிகளுக்கு போதிய விழிப்புணர்வு ஏற்படுத்தி இதுபோன்ற செயல்களில் விளையாட்டாக கூட ஈடுபடுவதை தடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கூறி வருகின்றனர்.