சித்தார்த் மல்ஹோத்ரா, கியாரா அத்வானியின் திருமணம் வருகிற பிப்ரவரி 6-ம் தேதி நடைபெறவுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.
பாலிவூட் நடிகர்களில் முக்கியமானவர்களாக வலம் வந்து கொண்டிருப்பவர்கள் சித்தார்த் மல்ஹோத்ரா மற்றும் கியாரா அத்வானி. இதில் கியாரா அத்வானி எம்.எஸ் தோணி திரைப்படத்தில் சாக்ஷி கதாப்பாத்திரத்தில் நடித்து தமிழக ரசிகர்களையும் கவர்ந்தார்.
இருவருக்குமே ரசிகர் கூட்டம் உள்ள நிலையில், சித்தார்த் மல்ஹோத்ராவும், கியாரா அத்வானியும் காதலித்து வருவதாகவும், அவர்கள் இருவரும் திருமணம் செய்து கொள்ளப்போவதாகவும் தொடர்ந்து தகவல்கள் வெளிவந்துகொண்டிருந்தன.
ஆனால், இந்தத் தகவல்களை மறுத்தோ அல்லது உறுதி செய்தோ எந்த ஒரு கருத்தையும் இருவர் தரப்பிலிருந்தும் வெளியிடவில்லை. இதனால், அவர்கள் காதலிப்பதை ஏறத்தாழ பலரும் உறுதியாக்கினர்.
இந்நிலையில், சித்தார்த் மல்ஹோத்ரா, கியாரா அத்வானியின் திருமணம் வருகிற பிப்ரவரி 6-ம் தேதி நடைபெறவுள்ளதாகவும், திருமணத்தை ராஜஸ்தானில் உள்ள ஜெய்சாலிமர் பேலஸ் ஹோட்டலில் நடத்த முடிவு செய்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
முன்னதாக, சித்தார்த் மல்ஹோத்ராவும், கியாரா அத்வானியும் ‘ஷெர்ஷா’ என்ற திரைப்படத்தில் இணைந்து நடித்த போது அவர்களுக்கு இடையில் காதல் மலர்ந்ததாக கூறப்படுகிறது.
செல்வராகவனின் பகாசூரன்; வெளியான தீம் மியூசிக் விடியோ!