ஸ்மித் எனும் நபரின் நாய் துப்பாக்கியின் மீது குதித்து விளையாடியதில், காரை ஓட்டிச்சென்ற ஸ்மித் மீது குண்டு பாய்ந்து அவர் உயிரிழந்தார்.
உலக நாடுகள் பலவற்றில் வேட்டையாடுவதை விருப்பமாக கொண்டுள்ளனர். அந்த வகையில், அமெரிக்காவின் கனாஸ் மாகாணத்தைச் சேர்ந்தவர் ஜோசப் ஸ்மித் வேட்டையாடுவதை விருப்பமாகக் கொண்டிருப்பவர்களுள் ஒருவராக திகழ்ந்துள்ளார். ஸ்மித் பொதுவாகவே வேட்டையாட தனது நாயுடன் செல்வதை வழக்கமாக கொண்டவர்.
அந்த வகையில், கடந்த 21ஆம் தேதி ஸ்மித் தன் வளர்ப்பு நாயுடன் வேட்டைக்குப் புறப்பட்டுச் சென்றுள்ளார். அப்போது தன் காரை, முன் இருக்கையில் அமர்ந்து ஜோசப் ஓட்டிச் செல்ல, பின் இருக்கையில் அவரின் நாய் இருந்துள்ளது. அந்த இருக்கையில்தான், ஸ்மித்தின் துப்பாக்கியும் இருந்துள்ளது.
அப்போது, எதிர்பாராத விதமாக ஸ்மித்தின் நாய் துப்பாக்கி மீது ஏறிக் குதித்துள்ளது. அப்போது துப்பாக்கியில் இருந்து வெளியேறிய குண்டு, காரை ஓட்டிக்கொண்டிருந்த ஸ்மித் மீது பாய்ந்துள்ளது. இதனால், ஸ்மித் உயிரிழந்தார். அவரது உடலை மீட்ட காவல்துறையினர் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பிவைத்தனர். இந்தச் சம்பவம் அப்பகுதியின் மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
விபத்துக்குப் பிறகு விஜய் ஆண்டனி போட்ட ட்விட்!