Friday, May 3, 2024
மேலும்
    Homeசெய்திகள்தமிழ்நாடுபொரியலில் எலி தலை விவகாரம்! உணவு பாதுகாப்பு அதிகாரிகள் அதிரடி சோதனை..

    பொரியலில் எலி தலை விவகாரம்! உணவு பாதுகாப்பு அதிகாரிகள் அதிரடி சோதனை..

    சாப்பிட்டுக் கொண்டிருந்த பொரியலில் இறந்த எலியின் தலை இருந்ததை அடுத்து உணவு உண்டவர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

    திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள ஆரணியைச் சேர்ந்தவர் முரளி. இவர் நேற்று பிற்பகல் தன்னுடைய உறவினரின் காரிய சடங்கிற்காக ஆரணி பாலாஜி பவன் சைவ உணவகத்தில் 35 சாப்பாடு வாங்கி சென்றுள்ளார்.

    சடங்கின்போது, சாப்பாடு பரிமாறிக் கொண்டிருந்தனர். அப்போது, சாப்பிட்டிலுள்ள பீட்ரூட் பொரியலில் இறந்த எலியின் தலை இருந்ததை அடுத்து அனைவரும் அதிர்ச்சியடைந்துள்ளனர். பலர் அந்த இடத்திலேயே வாந்தி எடுத்துள்ளனர். 

    இதனைக் கண்ட முரளி மற்றும் அவரது உறவினர்கள் உணவகத்திற்கு எலியின் தலையோடு சென்று வாக்கு வாதத்தில் ஈடுபட்டுள்ளனர். தகவலறிந்த ஆரணி நகர போலிஸார் ஓட்டலுக்கு சென்று இறந்த எலியின் தலையை கைப்பற்றி உணவு பாதுகாப்பு துறைக்கு அனுப்பி வைத்து உண்மை தன்மையை கண்டறியப்படும் என உறுதியளித்தனர். இதையடுத்து பாதிக்கப்பட்டவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....