Saturday, March 16, 2024
மேலும்
    Homeசெய்திகள்அரசியல்காவல் துறையை ஏவல் துறையாக பயன்படுத்துவதே ஆளுங்கட்சியின் வேலை - ஜெயக்குமார் காட்டம்!

    காவல் துறையை ஏவல் துறையாக பயன்படுத்துவதே ஆளுங்கட்சியின் வேலை – ஜெயக்குமார் காட்டம்!

    ஆளுங்கட்சி, காவல் துறையை ஏவல் துறையாக பயன்படுத்துகின்றனர் என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் தெரிவத்துள்ளார். 

    தி.மு.க. அரசு ஆட்சிக்கு வந்தப் பிறகு அ.இ.அ.தி.மு.க அமைச்சர்களுக்கு சொந்தமான இடங்களில் அவ்வபோது லஞ்ச ஓழிப்பு சோதனை அரங்கேறுவது வாடிக்கையான ஒன்றாகிவிட்டது. 

    இந்நிலையில், இன்று காலை அ.இ.அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் மற்றும் எஸ்.பி. வேலுமணி ஆகியோருக்கு சொந்தமான இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். இதற்கு அதிமுகவினர் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். 

    இந்நிலையில், அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் இது குறித்து கூறியுள்ளதாவது:

    முதல் அமைச்சர் காவல்துறையை தனது கட்டுப்பாட்டில் வைத்துக்கொண்டு அதிமுகவை ஒழித்து விட வேண்டும் என்று செயலாற்றுகிறார். ஆளுங்கட்சி எதிர்க்கட்சிகளை செயல்பட விடாமல் தடுக்க நினைக்கின்றனர். மேலும், காவல் துறையை ஏவல் துறையாக பயன்படுத்துகின்றனர். மின்கட்டண உயர்வை மக்கள் மறக்கவே இந்த ரெய்டு நடத்தப்படுகிறது.

    இவ்வாறு அவர் தெரிவித்தார். 

    இதையும் படிங்க: தொடரும் லஞ்ச ஒழிப்பு துறையினரின் சோதனை – கடுப்பில் முன்னாள் அமைச்சர்கள்

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....