Sunday, April 28, 2024
மேலும்
    Homeசெய்திகள்இந்தியாநான் இதற்காகத் தான் கஞ்சா பயன்படுத்தினேன்: ஷாருக்கான் மகன் ஆர்யன் கான் வாக்குமூலம்!

    நான் இதற்காகத் தான் கஞ்சா பயன்படுத்தினேன்: ஷாருக்கான் மகன் ஆர்யன் கான் வாக்குமூலம்!

    பிரபல பாலிவுட் நடிகர் ஷாருக்கான் மகனான ஆர்யன் கான், போதைப் பொருள் பயன்படுத்திய காரணத்திற்காக கடந்த சில மாதங்களுக்கு முன்னர் கைது செய்யப்பட்டார். மும்பையிலிருந்து, தனது நண்பர்களுடன் கோவா நோக்கி சுற்றுலா சென்ற போது இச்சம்பவம் நடந்தது. இந்த வழக்கில் பல நாட்களாக விசாரணை நடத்தப்பட்டு, கடந்த வாரம் தான் ஆர்யன் கான் குற்றவாளி அல்ல என்றும், அவர் ஒரு அப்பாவி என்றும் போதைப்பொருள் தடுப்பு காவல் துறையினர் குற்றப்பத்திரிகையில் தெரிவித்து இருந்தனர். இந்நிலையில், ஆர்யன் கானின் வாக்குமூலம் சினி உலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    ஹிந்தி நடிகர் ஷாருக்கானின் மகன் ஆர்யன் கான்‌, அமெரிக்காவில் படித்து வந்தார். கல்லூரி காலத்தில், போதைப் பொருளான கஞ்சாவை தான் பயன்படுத்தி உள்ளதாக, ஒப்புக் கொண்டார் என, தேசிய போதைப் பொருள் தடுப்பு பிரிவினர் தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மஹாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள மும்பையிலிருந்து கோவாவுக்கு, ஆர்யன் கான் தன் நண்பர்களுடன் சுற்றுலா சென்ற சொகுசு கப்பலில் போதைப்பொருள் விருந்து நடப்பதாக தகவல் கிடைத்தது. தகவலைத் தொடர்ந்து உடனே அங்கு சென்ற போதைப் பொருள் தடுப்பு பிரிவினர், சொகுசுக் அந்த கப்பலில் அதிரடிச் சோதனை நடத்தினர். இதில் பாலிவுட் நடிகர் ஷாருக் கான் மகன் ஆர்யன் கான் மற்றும் அவரது நண்பர்கள் உட்பட பல பேர் கைது செய்யப்பட்டு, பின், அவர்கள் நிபந்தனை ஜாமினில் வெளிவந்தது. போதைப் பொருள் தடுப்பு பிரிவினர், ஆர்யன் கான் வழக்குத் தொடர்பாக மும்பையில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் சமீபத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர். இதில், ஆர்யன் கான் உட்பட 6 பேரின் பெயர்கள் இடம்பெறவில்லை. இவர்கள் போதைப் பொருள் பயன்படுத்தியதில் போதிய ஆதாரம் கிடைக்கவில்லை என, குற்றப் பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    குற்றப்பத்திரிகையில் ஆர்யன் கான் பற்றி மேலும் கூறப்பட்டுள்ளதாவது:

    ஆர்யன் கான் அமெரிக்காவில் படித்தபோது, துாக்கமின்மை நோயால் பாதிக்கப்பட்டு வந்துள்ளார். கஞ்சாவைப் பயன்படுத்தினால் துாக்கமின்மையிலிருந்து, தப்பி விடலாம் என, இணையம் வழியாக அறிந்து கொண்டுள்ளார். இதனையடுத்து, படிப்புக்காக அமெரிக்காவில் இருந்தபோது, அவர் கஞ்சா பயன்படுத்தியதையும் ஒப்புக் கொண்டுள்ளார்.

    மும்பையில் இருக்கும் பாந்த்ரா பகுதியில் போதைப் பொருள் விற்பனை செய்யும் ஒருவரை தனக்கு தெரியும் எனவும், ஆனால், அவரது பெயர் மற்றும் முகவரி ஆகிய விவரங்கள் தெரியாது எனவும் தெரிவித்தார் ஆர்யன் கான். என் நண்பனான ஆஷித்துக்குத் தான் அவர் நண்பர் என தெரிவித்தார். ஆனால் சொகுசு கப்பலில் ஆர்யன் கானிடம் போதைப் பொருள் எதுவும் கைப்பற்றப்படவில்லை.

    சிவகார்த்திகேயனின் அடுத்தப்பட அப்டேட் இதோ! ரசிகர்களுக்கு குதூகலம்தான்!

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....