விராட் கோலியின் மீதான சாகித் அப்ரிடியின் கருத்துக்கு கிரிக்கெட் ரசிகர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
விராட்கோலியின் மீது கடந்த சில வருடங்களாக பல்வேறு குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டது. அவரது ஃபார்ம் குறித்து கேள்விகள் எழும்பின. இந்நிலையில், தன் மீதான அனைத்து விமர்சனங்களுக்கும் ஒரு சதத்தின் மூலம் பதில் தந்துள்ளார்.
இந்நிலையில், கோலியின் ஓய்வு குறித்து பாகிஸ்தான் முன்னாள் வீரர் சாகித் அப்ரிடி பேசியுள்ளார். அவர் தனியார் தொலைக்காட்சிக்கு அளித்துள்ள பேட்டியில் பேசியுள்ளதாவது:
பார்ம் அவுட் காரணமாகி அணியில் இருந்து நீக்கப்படும் நிலையை கோலி அடையக்கூடாது. அதற்கு பதிலாக, அவர் புகழின் உச்சத்தில் இருக்கும்போது ஓய்வை அறிவிக்க வேண்டும். விராட் ஓய்வு முடிவை ஒரு நல்ல நிலையில் செய்வார் என்று நான் நம்புகிறேன். அவர் தனது கிரிக்கெட் பயணத்தை தொடங்கியதைப் போன்றே தனக்கான அதிரடி பாணியில் தனது கிரிக்கெட் பயணத்தை முடிப்பார்.
இவ்வாறாக கூறியிருந்தார்.
சாகித் அப்ரிடியின் இந்த கருத்துக்கு இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் சமூகவலைதளங்களில் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.