Saturday, March 16, 2024
மேலும்
    Homeசெய்திகள்தமிழ்நாடுசேலத்தில் கொடூரம்; ரத்த வெள்ளத்தில் மிதந்த காவலாளி

    சேலத்தில் கொடூரம்; ரத்த வெள்ளத்தில் மிதந்த காவலாளி

    சேலத்தில் தனியார் பருப்பு ஆலையில் காவலாளி மர்மமான முறையில் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

    சேலம் மாவட்டம், அமானி கொண்டலாம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் தங்கையா. இவருக்கு வயது 52. தங்கையாவுக்கு மனைவி மற்றும் இரண்டு மகள்கள் உள்ளனர். இவர் கடந்த 4 ஆண்டுகளாக பள்ளப்பட்டி பகுதியில் இயங்கி வரும் தனியார் பருப்பு ஆலையில் காவலராக பணியாற்றி வந்தார். 

    இந்நிலையில், நேற்று இரவு ஆலையில் காவலர் பணியில் இருந்த தங்கையா மர்மமான முறையில் ரத்த வெள்ளத்துடன் சடலாமாகக் கிடந்தார். காவலரின் சடலத்தை பார்த்த பருப்பு மில் உரிமையாளர் பாஸ்கர், தங்கையாவின் உறவினர்களுக்கு தகவல் கொடுத்தார். இதையடுத்து, தங்கையாவின் சடலத்தை பார்த்த அவரது உறவினர்கள் அவர் கொலை செய்யப்பட்டிருப்பதாக பள்ளிப்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். 

    இதைத்தொடர்ந்து, அங்கு விரைந்த காவல்துறையினர் தங்கையாவின் சடலத்தை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து பள்ளிப்பட்டு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

    ‘இரட்டை இலை சின்னத்திற்கு மவுசு குறைந்ததா? ‘ – முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பதில்!

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....