சிவாஜியின் மகன் ராம்குமார் மற்றும் அவரது பேரன் துஷ்யந்த் ஆகிய இருவருக்கு எதிராக பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளது.
மறைந்த பிரபல நடிகர் சிவாஜி கணேசனுக்கு இரு மகன்களும் இரு மகள்களும் உள்ளனர். மகன்கள் நடிகர் பிரபு மற்றும் ராம்குமார். மகள்கள் சாந்தி, ராஜ்வி ஆகியோர் ஆவர்.
ராம் குமாரின் மகன் துஷ்யந்த் மற்றும் அவரது மனைவி ஆகிய இருவரும் நிர்வகிக்கக் கூடிய நிறுவனம் ஒன்று மயிலாப்பூரை சேர்ந்த நிறுவனம் ஒன்றுடன் வர்த்தக தொடர்பு வைத்திருந்துள்ளது.
அந்த நிறுவனத்திற்கு ராம் குமாரின் மகன் துஷ்யந்த் அளித்த ரூ.15 லட்சம் மதிப்பிலான இரண்டு காசோலைகள் வங்கியில் பணம் இல்லாமல் திருப்பி வந்துவிட்டது. இதனால், இது தொடர்பாக துஷ்யந்த் மீது புகார் எழுந்தது.
இதைத்தொடர்ந்து, துஷ்யந்திற்கு ஆதரவாக அவரது தந்தை ராம் குமார் வாக்குறுதி அளித்துள்ளார். ஆனால் ராம்குமார், துஷ்யந்த் ஆகியோர் கொடுத்த வாக்குறுதியின்படி பணத்தை திருப்பி அளிக்கவில்லை எனக் கூறப்படுகிறது.
இந்நிலையில், இச்சம்பவம் தொடர்பாக பதியப்பட்ட வழக்கில் சைதாப்பேட்டை நீதிமன்றம் ராம்குமார் மற்றும் அவரது மகன் துஷ்யந்த் ஆகிய இருவருக்கு எதிராக பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளது.
“நான் ஹீரோ இல்ல….. மக்களே நம்பாதீங்க” – யோகிபாபு போட்ட ட்விட்