தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே உள்ள தட்டார் மடத்தில் பெருந்தலைவர் காமராஜர் மக்கள் பேரவை சார்பில் முதல் ஆண்டு தொடக்க விழா, வாழும் காமராஜர் விருது வழங்கும் விழா மற்றும் காமராஜர் பிறந்த நாள் விழா ஆகிய முப்பெரும் விழா நடைபெற்றது.
முன்னாள் ஐஏஏஸ் அதிகாரியும், மக்கள் பாதை பேரியக்கத் தலைவருமான சகாயம் தலைமயில் மேற்சொன்ன முப்பெரும் விழாவானது நடைபெற்றது. இந்நிலையில், இந்த நிகழ்ச்சியில் சகாயத்திற்கு ‘வாழும் காமராஜர் விருது’ வழங்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
அதன்படியே, வாழும் காமராஜர் விருது பெறப்படும் நபராக சகாயம் அறிவிக்கப்பட்டார். ஆனால், பெருந்தலைவர் காமராஜருடன் என்னை ஒப்பிட்டு விருது வழங்க வேண்டாம் என கூறினார். மேலும், அவருக்கு இணை யாருமில்லை என்றும் அவர் கூறினார்.
இதைத்தொடர்ந்து, இந்நிகழ்ச்சியின் ஏற்பாட்டாளர்கள் உடனடியாக விரைந்து சென்று கருப்பட்டியையும், புத்தகங்களையும் வாங்கி வந்து சகாயத்திற்கு பரிசாக அளித்து கவுரவப்படுத்தினர்.
ஏற்கனவே, நேர்மையான ஐஏஎஸ் அதிகாரி என்ற பார்வையிலேயே மக்கள் இவரை பார்க்கின்றனர். இந்நிலையில், இந்த நிகழ்வு பெரும் நன்மதிப்பை பெற்று வருகிறது.
அடுத்த சீசனிலும் தோனிதான் கேப்டன் – சிஎஸ்கே ரசிகர்கள் உற்சாகம்