வங்கதேசத்துக்கு எதிரான முதலாவது டெஸ்டில் இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா பங்கேற்க மாட்டார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய கிரிக்கெட் அணி வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இந்த சுற்றுப்பயணத்தில், 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரும், 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரும் நடைபெறவுள்ளது.
இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரை 2-1 என்ற கணக்கில் வங்கதேச அணி கைப்பற்றியது. இதைத்தொடர்ந்து, வருகிற 14-ஆம் தேதி சிட்டகாங்கில் டெஸ்ட் தொடர் தொடங்கவுள்ளது.
இந்நிலையில், வங்கதேசத்துக்கு எதிரான முதலாவது டெஸ்டில் இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா பங்கேற்க மாட்டார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மிர்பூரில் நடைபெற்ற இரண்டாவது ஒருநாள் போட்டியின் பீல்டிங்கின் போது, ரோஹித் சர்மா பெருவிரலில் காயம் ஏற்பட்டது. இதனால் அவர் முதல் டெஸ்ட் ஆட்டத்தில் இருந்து விலகியுள்ளார்.
மேலும், முதலாவது டெஸ்ட்டில் ரோஹித் சர்மாவுக்கு பதிலாக கே.எல் ராகுல் அணிக்கு தலைமை தாங்குவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேசமயம், ரோஹித் சர்மாவுக்கு பதிலாக அபிமன்யூ ஈஸ்வரன் சேர்க்கப்பட்டுள்ளார்.
முன்னதாக, வங்கதேசத்தின் ஏ அணியினருக்கு எதிராக நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் அபிமன்யூ ஈஸ்வரன் 299 ரன்கள் எடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.
வெறுமனே வெற்றிகளால் நிறைந்தவர் இல்ல, ரஜினிகாந்த்… – பர்த்டே ஸ்பெஷல்!