கால்பந்து உலகக் கோப்பை தொடரில் வருகிற 14 மற்றும் 15 ஆகிய தேதிகளில் அரையிறுதிச்சுற்றுகள் நடைபெறவுள்ளன.
கத்தாரில், நடப்பாண்டிற்கான கால்பந்து உலகக் கோப்பை போட்டியானது தற்போது நடைபெற்று வருகிறது. தலா 4 அணிகள் கொண்ட 8 பிரிவுகள் என மொத்தம் 32 அணிகளுடன் கடந்த நவம்பர் 20-ஆம் தேதி தொடங்கிய,
இந்த கால்பந்து உலகக் கோப்பை போட்டியில் லீக் சுற்றுகள் அனைத்தும் முடிவடைந்தும், தற்போது அரையிறுதிச் சுற்றுகள் நடைபெறவுள்ளது.
இந்த உலகக் கோப்பை தொடரின் முதலில் குரூப் ஆட்டங்கள் நடைபெற்றன. இதைத்தொடர்ந்து, நாக்-அவுட் சுற்றுகளும், காலிறுதியும் நடைபெற்றன. காலிறுதிச் சுற்றில் 5 முறை சாம்பியன் பிரேசில்-குரோஷியாவுடனும், போர்ச்சுகல்-மொராக்கோவிடமும், நெதர்லாந்து- ஆர்ஜென்டீனாவிடமும் தோல்வியடைந்து வெளியேறின.
இதைத்தொடர்ந்து, குரோஷியா, மொராக்கோ, பிரான்ஸ், அர்ஜென்டீனா ஆகிய அணிகள் அரையிறுதியில் விளையாடவுள்ளன. அரையிறுதியானது வருகிற 14, 15 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ளது.
14-ஆம் தேதி நடைபெறும் ஆட்டத்தில், அர்ஜென்டீனா-குரோஷியாவுடனும் 15-ஆம் தேதி நடைபெறும் ஆட்டத்தில், பிரான்ஸ்-மொராக்கோவுடனும் அரையிறுதியில் மோதவுள்ளது குறிப்பிடத்தக்கது.
வெறுமனே வெற்றிகளால் நிறைந்தவர் இல்ல, ரஜினிகாந்த்… – பர்த்டே ஸ்பெஷல்!