இந்திய கிரிக்கெட் வீரர் ரிஷப் பந்த் இன்று டேராடூனில் உள்ள மருத்துவமனையில் இருந்து மும்பை மருத்துவமனைக்கு மாற்றப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர்களில் ஒருவர், ரிஷப் பந்த். 25 வயதாகும் ரிஷப் பந்த் ரூர்க்கியில் உள்ள தனது வீட்டில் இருந்து கார் மூலம் டெல்லி சென்றுக்கொண்டிருந்த போது கடந்த 30-ஆம் தேதி விபத்தில் சிக்கினார்.
ரிஷப் பந்த் பலத்த காயம் அடைந்த நிலையில், ரூர்க்கியில் உள்ள சக்ஷாம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அதன் பின்னர், டேராடூனில் உள்ள மேக்ஸ் மருத்துவமனைக்கு அவர் மாற்றம் செய்யப்பட்டார்.
இதைத்தொடர்ந்து, ரிஷப் பந்திற்கு நெற்றியில் ஏற்பட்ட வெட்டு காயங்களுக்கு பிளாஸ்டிக் சர்ஜரி செய்யப்பட்டது. மேலும், ரிஷப் பந்த் வலது கால் முட்டியில் தசை நார் கிழிந்து இருக்கிறது. வலது கை மணிக்கட்டு, கணுங்கால் பாதம் மற்றும் முதுகில் சிராய்ப்பு காயங்கள் ஏற்பட்டு இருக்கிறது. இதற்கெல்லாம் ரிஷப் பந்திற்கு மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
இந்நிலையில், ரிஷப் பந்திற்கு காலில் ஏற்பட்ட காயத்திற்கு சிகிச்சை அளிப்பதற்காக அவர் மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு மாற்றப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இத்தகவலை, டெல்லி கிரிக்கெட் சங்கத்தின் இயக்குநர் ஷியாம் சர்மா தெரிவித்துள்ளார். மேலும், மும்பை மருத்துவமனையில் ரிஷப் பந்திற்கு சில ஸ்கேன்கள் செய்யப்பட உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
கடலூர் மாவட்டத்திற்கு ஜனவரி 6 ஆம் தேதி உள்ளூர் விடுமுறை