கௌதம் வாசுதேவ் மேனனின் இன்ஸ்டாகிராம் பதிவால், துருவ நட்சத்திரம் திரைப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என்று ரசிகர்களால் எதிர்பார்க்கப்படுகிறது.
கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் உருவாகிக் கொண்டிருந்த திரைப்படம்தான், துருவ நட்சத்திரம். இத்திரைப்படத்தில், நடிகர் விக்ரம் கதாநாயகனாக நடிக்க, அவருடன் ஐஸ்வர்யா ராஜேஷ், ரிது வர்மா, சிம்ரன் போன்றோர் நடித்துள்ளனர். மேலும், இத்திரைப்படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார்.
துருவ நட்சத்திரம் திரைப்படத்தில் இருந்து வெளிவந்த முன்னோட்டம் திரைப்பட ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. மேலும், இத்திரைப்படத்தில் இருந்து வெளிவந்த ‘ஒரு மனம்’ பாடலும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.
இப்படியாக, நல்ல வரவேற்பை ரசிகர்களிடம் பெற்ற துருவ நட்சத்திரம், தனது முழுப்படப்பிடிப்பை நிறைவு செய்யவில்லை. ஆம், பல்வேறு காரணங்களால் துருவ நட்சத்திரம் திரைப்படத்தின் படப்பிடிப்பு நின்றுவிட்டது. இருப்பினும், துருவ நட்சத்திரம் எப்போது திரைக்கு வரும் என்று திரைப்பட ரசிகர்கள் பலர் ஆர்வமுடன் காத்திருந்தனர். ஆனால், துருவ நட்சத்திரம் திரைப்படத்தைப் பற்றிய அறிவிப்புகள் எதுவும் வெளிவரவில்லை.
இந்நிலையில், சமீபத்தில் கௌதம் வாசுதேவ் மேனன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விக்ரமுடன் இருக்கும் புகைப்படம் ஒன்றைப் பதிவிட்டுள்ளார். இதனால், துருவ நட்சத்திரம் திரைப்படம் மீண்டும் தொடங்கப்படுமா என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.
மேலும், கௌதம் வாசுதேவ் மேனன் தனது பதிவில் புகைப்படத்தின் கீழ் ‘நட்சத்திரங்கள் மீண்டும் ஒன்றுசேர உள்ளது’ என்று குறிப்பிட்டுள்ளார். இதனால், துருவ நட்சத்திரம் திரைப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என்று ரசிகர்களால் எதிர்பார்க்கப்படுகிறது.
நடிகர் விக்ரம் நடித்துள்ள கோப்ரா மற்றும் பொன்னியின் செல்வன் ஆகிய திரைப்படங்கள் விரைவில் திரைக்கு வர இருப்பது குறிப்பிடத்தக்கது.
வெளியாகிறதா ஜிகர்தண்டா-2 திரைப்படம்?