திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ரிலையன்ஸ் நிறுவனத்தின் தலைவர் முகேஷ் அம்பானி இன்று சுவாமி தரிசனம் செய்தார்.
இந்தியாவில் பிரசத்தி பெற்ற திருத்தலங்களில் ஒன்றாக பார்க்கப்படுவது திருமலா திருப்பதி திருத்தலம். திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு எப்போதும் வரும் பக்தர்கள், தரிசனம் செய்வதும் நேத்திக் கடன் செலுத்துவதையும் வழக்கமாக கொண்டுள்ளனர்.
நடப்பாண்டு தீபாவளி முதல் 5ஜி சேவை மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்படும் என ஜியோ நிறுவனம் அறிவித்துள்ளது. முதல் கட்டமாக நான்கு நகரங்களில் 5 ஜி சேவை வழங்க கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: தந்தை பெரியாரின் 144வது பிறந்த நாள் – முதல்வர் மு.க.ஸ்டாலின் மலர்தூவி மரியாதை
இந்த நிலையில் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ரிலையன்ஸ் நிறுவனத்தின் தலைவர் முகேஷ் அம்பானி இன்று சுவாமி தரிசனம் செய்தார். மேலும், இந்த தரிசனத்தின்போது, முகேஷ் அம்பானி திருப்பதி கோயிலுக்கு ரூ.1.5 கோடியை நன்கொடையாக வழங்கியதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.
முன்னதாக கடந்த திங்கள்கிழமை ராஜஸ்தானில் உள்ள ஶ்ரீநாத்க்ஜி கோயிலுக்கு குடும்பத்துடன் சென்று முகேஷ் அம்பானி சுவாமி தரிசனம் செய்திருந்தார்.