அணிந்துரை எழுதிய இளையராஜாவே ‘அம்பேத்கரும் மோடியும்’ நூல் வெளியிட்டு விழாவில் பங்கேற்காதது சர்ச்சையை எழுப்பியுள்ளது.
இசையமைப்பாளர் இளையராஜா அணிந்துரை எழுதி தில்லியில் ‘அம்பேத்கரும் மோடியும்’ நூலை முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் வெள்ளிக்கிழமை வெளியிட்டார்.
சட்டமேதை அம்பேத்கரின் தொலைநோக்குப் பார்வை அமலுக்குக் கொண்டு வரப்பட்டுள்ளதாக. பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நிகழ்த்தப்பட்ட சாதனைகளை எடுத்துரைக்கப்பட்ட நூல்தான் ‘அம்பேத்கரும் மோடியும்’ என்று தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், அந்த நூலை தில்லியில் முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் வெள்ளிக்கிழமை வெளியிட்டார். இந்த நூல் வெளியிட்டு விழாவில் இளையராஜா பங்கேற்காதது குறித்து சர்ச்சைகள் எழுந்துள்ளது.
இதையும் படிங்க : ஷாருக்கான் திரைப்படத்தில் இப்படியொரு கிளைமேக்ஸ் சண்டையா….அதகளம் செய்யும் அட்லி!
இந்த விழாவில் கலந்துகொள்ள அழைப்பு விடுத்திருந்த போதிலும் இளையராஜா இந்நிகழ்வில் பங்கேற்கவில்லை. இந்த நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர், எல்.முருகன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
முன்னதாக, மாநிலங்களவை நியமன உறுப்பினர் பதவி இளையராஜாவுக்கு வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.