Tuesday, April 30, 2024
மேலும்
    Homeசெய்திகள்தமிழ்நாடுமேட்டூர் அணையிலிருந்து 1.45 லட்சம் கன அடி நீர் வெளியேற்றம்

    மேட்டூர் அணையிலிருந்து 1.45 லட்சம் கன அடி நீர் வெளியேற்றம்

    மேட்டூர் அணையிலிருந்து 1 லட்சத்து 45 ஆயிரம் கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. 

    கர்நாடக மாநிலத்தில் பருவ மழை தீவிரமடைந்ததால், கடந்த ஜூலை மாதம் காவிரி ஆற்றில் தண்ணீர் திறந்துவிடப்பட்டது. இதைத்தொடர்ந்து, மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிக்கத் தொடங்கியது. மேலும், கடந்த ஜூலை மாதம் 16-ம் தேதி மேட்டூர் அணையின் முழு கொள்ளளவான 120 அடியை  எட்டியது. அன்றைய தினம் முதல் நேற்று வரை அணையின் நீர்மட்டம் தொடர்ந்து 120 அடியாகவே இருந்து வருகிறது. 

    இந்நிலையில், இன்று (ஆகஸ்ட் 9) காலை 8 மணி நிலவரப்படி, மேட்டூர் அணையின் நீர்மட்டம் 120.05 அடியாகவும், நீர் இருப்பு 93.55 டி.எம்.சி-யாகவும், அணைக்கான நீர்வரத்து 1,44,000 கன அடியாகவும் உள்ளது. 

    இதன் காரணமாக, அணையிலிருந்து 1,45,000 கன அடி உபரி நீர் வெளியேற்றப்படுகிறது. மேலும், கால்வாய் பாசனத்திற்கு 400 கன அடி நீர் தொடர்ந்து வெளியேற்றப்படுகிறது. 

    2-ம் உலகப் போரின் வெடிகுண்டு 70 ஆண்டுகளுக்கு பிறகு கண்டெடுப்பு

     

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....