Thursday, May 2, 2024
மேலும்
    Homeசெய்திகள்தமிழ்நாடுஐந்து வெண்கல சிலைகள் மீட்பு; சிலை கடத்தல் தடுப்பு பிரிவு காவல்துறை அதிரடி

    ஐந்து வெண்கல சிலைகள் மீட்பு; சிலை கடத்தல் தடுப்பு பிரிவு காவல்துறை அதிரடி

    திண்டுக்கல் மாவட்ட கோயிலில் திருடப்பட்ட 5 வெண்கல சிலைகள் மீட்கப்பட்டுள்ளன.

    தமிழ்நாட்டிற்கு சொந்தமான பழமை வாய்ந்த சிலைகளை, சிலை கடத்தல் தடுப்பு பிரிவு காவல்துறையினர் மீட்டு வருகின்றனர். அந்த வகையில், திண்டுக்கல் மாவட்டத்தில் கடந்த ஆண்டு திருடப்பட்ட ஐந்து வெண்கல சிலைகள் தற்போது மீட்கப்பட்டு உள்ளன. இதன் மதிப்பு ரூ.12 கோடியாகும். மேலும், இந்த வழக்கில் தொடர்புடைய நான்கு பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.

    திண்டுக்கல் மாவட்டம், வடமதுரையில் உள்ள மலைப்பகுதியில் புகழ் பெற்ற இந்துமத கடவுள் ஆதிநாதபெருமாள்-ரங்கநாயகி கோவில் உள்ளது. இந்த கோயிலில் ஏற்கனவே இருந்த பழைய கடவுள் சிலைகளை அகற்றிவிட்டு புதிய சிலைகளை வைக்க முடிவு எடுக்கப்பட்டது. அதனை செயல்படுத்தும் விதமாக வெண்கலத்தால் ஆன 5 புதிய சிலைகள் நிறுவப்பட்டன.

    இதனை தொடர்ந்து பெருமாள், ஸ்ரீதேவி, பூதேவி, பார்வதி, சந்திரசேகர் என 5 கடவுள்களின் வெண்கல சிலைகள் கோயிலில் நிறுவப்பட்டு பூஜைகள் நடத்தப்பட்டு வந்தது. இதனிடையே, கடந்த ஆண்டு மே மாதம் 21-ம் தேதி இந்த கோயிலில் இருந்த பூசாரிகளை கத்தி முனையில் மிரட்டி புதிதாக நிறுவப்பட்ட 5 சிலைகளும் திருடப்பட்டது.

    மேலும், 3 பேர் கொண்ட குழு இந்த சிலை திருட்டு விவகாரத்தில் ஈடுபட்டது போலீஸாருக்கு தெரிய வந்தது.பிரபாகர் என்ற கொள்ளையன் தலைமையில் இந்த 5 சிலைகளும் கடத்தி செல்லப்பட்டது போலீஸார்யால் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.

    ஆனால், இந்த சிலை திருட்டு தொடர்பாக எந்தவித புகாரும் அளிக்கப்படாத சூழ்நிலையில் இந்த 5 சிலைகளும் விற்பனைக்கு வந்துள்ளதாக சிலைகடத்தல் தடுப்பு பிரிவு காவல்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது. மேலும், இந்த 5 வெண்கல சிலைகளுக்கும் 12 கோடி ரூபாய் விலை நிர்ணயம் செய்யப்பட்டு விற்பனைக்கு வந்துள்ளதாக தகவல் கிடைத்து உள்ளது.

    தகவலின் பேரில், சிலை கடத்தல் தடுப்பு பிரிவு காவல்துறை சிலைகளை வாங்குவதுபோல், மாறுவேடத்தில் சம்பவ இடத்திற்கு சென்றனர். பின்னர் கடத்தப்பட்ட 5 சிலைகளையும் மீட்டனர்.

    மேலும், சிலைகளை விற்பனை செய்ய இடைத்தரகர்களாக செயல்பட்ட இளவரசன், பால்ராஜ், தினேஷ் குமார் என 3 பேர் மற்றும் கொள்ளையில் முக்கிய குற்றவாளியான பிரபாகர் ஆகிய 4 பேரையும் சிலைகடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.

    ஆயினும், இத்திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட குமார், ஈஸ்வரன் ஆகிய 2 பேர் தொடர்ந்து தலைமறைவாக உள்ளனர். அவர்களை தேடும் பணியில் காவல்துறையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

    அசோக் நகர் சிலைகடத்தல் தடுப்பு பிரிவு அலுவலகத்திற்கு கடத்தப்பட்ட 5 சிலைகளும் ஒப்படைக்கப்பட்டு உள்ளன. இதனை தொடர்ந்து, நீதிமன்ற நடைமுறைகளுக்கு பின், மீண்டும் ஆதிநாதபெருமாள்-ரங்கநாயகி கோயிலில் சிலைகளை ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறையினர் தெரிவித்து உள்ளனர் .

    சென்னை பாரிமுனையில் 130 கடைகளுக்கு சீல்

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....