ராகுல் காந்தியின் பாத யாத்திரையின் போது, சோனியா காந்தியும் உடன் பங்கேற்றார்; அப்போது ஒரு நெகிழ்ச்சியான சம்பவம் நடைபெற்றது.
காங்கிரஸ் முன்னாள் தலைவரும் அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினருமான ராகுல் காந்தி, ‘இந்திய ஒற்றுமை’ என்ற பயணத்தை கடந்த 8 ஆம் தேதி கன்யாகுமரியில் தொடங்கினார். அப்போது தொடங்கிய இந்தப் பயணம் கேரளா வழியாக தற்போது கர்நாடகாவில் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், இன்று மண்டியா மாவட்டம் பாண்டவபுராவில் இருந்து ராகுல் காந்தி தனது பாதயாத்திரையை மீண்டும் தொடங்கினார். இன்றைய பாத யாத்திரையில் ராகுல் காந்தியுடன் சோனியா காந்தியும் பங்கேற்றார்.
இன்று இவர்கள் இருவரும் சேர்ந்து சிறிது தூரம் நடந்தனர். அப்போது சோனியா காந்தியின் ஷூ லேஸ் கழன்றது. உடனே ராகுல் காந்தி தனது அம்மாவின் ஷூ லேஸை கட்டிவிட்டார். இந்தக் காட்சியை உடன் இருந்தவர்கள் காணொளியாக எடுத்து இணையத்தில் பதிவிட்டனர்.
தற்போது இந்தக் காணொளி இணையத்தில் அதிகம் உலாவிக் கொண்டு வருகிறது.
This is what usually a son or daughter does – but, this image is getting viral because, unlike Modi, Rahul Gandhi is not doing for camera! pic.twitter.com/w1av2KryJS
— Ashok Swain (@ashoswai) October 6, 2022
இதையும் படிங்க:‘அடடா’,.. என வியக்க வைக்கும் நடிகை த்ரிஷாவின் அழகிய பிரத்யேக புகைப்படங்கள்!