பழஞ்சூர், பாப்பான்சத்திரம் கிராமங்களை திருவள்ளூர் மாவட்டத்தில் இணைத்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
திருவள்ளூர் மாவட்டம் பூந்தமல்லி தாலுகா செம்பரம்பாக்கம் ஊராட்சியில் செம்பரம்பாக்கம், பழஞ்சூர், பாப்பான்சத்திரம் ஆகிய கிராமங்கள் உள்ளன.
செம்பரம்பாக்கம் கிராமம் மட்டும் திருவள்ளூர் மாவட்டம், பூந்தமல்லி தாலுகா வருவாய்த்துறை நிர்வாக கட்டுப்பாட்டில் இருந்தது.
பழஞ்சூர், பாப்பான்சத்திரம் ஆகிய கிராமங்கள் காஞ்சிபுரம் மாவட்டம், திருப்பெரும்புதூர் தாலுகா வருவாய்த்துறை நிர்வாக கட்டுப்பாட்டில் இருந்தது. இதனை மாற்றக்கூறி அப்பகுதி பொதுமக்கள் போராடினர். மேலும் ஒரே ஊராட்சிக்கு உட்பட்ட கிராமங்கள் இரண்டு மாவட்ட நிர்வாக கட்டுப்பாட்டில் வந்ததால் பல்வேறு குழப்பங்கள் இருந்து வந்த நிலையில் பழஞ்சூர், பாப்பான்சத்திரம் கிராமங்களை திருவள்ளூர் மாவட்டத்தில் இணைத்து அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: வ.உ.சி. யின் 150 ஆவது பிறந்த ஆண்டு சிறப்பு இணையப்பக்கம் தொடக்கம்: சிறப்பு மலரை வெளியிட்ட முதல்வர் ஸ்டாலின்