தென்காசி மாவட்டத்தில் இன்று முதல் அடுத்த இரு வாரங்களுக்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
தென்காசி மாவட்டம், சிவகிரி வட்டம், பரச்சேரி கிராமத்தில் ஆகஸ்ட் 20-ம் தேதி சுதந்திர போராட்ட வீரர் ஒண்டிவீரன் 251 ஆவது வீரவணக்க நிகழ்ச்சியும், செப்டம்பர் 1-ம் தேதி நெற்கட்டும்செவல் கிராமத்தில் பூலித்தேவன் பிறந்த நாள் விழாவும் நடைபெறவுள்ளன.
இந்நிகழ்ச்சிகளில் இருவரது சிலைகளுக்கும் பல்வேறு அமைப்பினர் சார்பில் மாலை அணிவித்து, மலர்தூவி மரியாதை செலுத்த உள்ளூர் மட்டுமன்றி தென்காசி மாவட்டத்தின் பிற பகுதிகளிலிருந்தும் அதிகமானோர் வருவதற்கு வாய்ப்புள்ளது.
எனவே, சட்டம்-ஒழுங்கை பாதுகாக்கும் வகையில் இன்று (ஆகஸ்ட் 19) காலை 6 மணி முதல் செப்டம்பர் 2-ஆம் தேதி மாலை 6 மணி வரை 144 தடை உத்தரவு விதிக்கப்படுவதாக தென்காசி மாவட்ட ஆட்சியர் ப.ஆகாஷ் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், நாளை நடைபெற உள்ள சுதந்திர போராட்ட வீரர் ஒண்டிவீரன் வீரவணக்க நிகழ்ச்சிக்காக தென்காசி மாவட்டத்தில் இன்று காலை 6 மணி முதல் 144 தடை உத்தரவு அமலுக்கு வந்தது.