Wednesday, May 8, 2024
மேலும்
    Homeசெய்திகள்தமிழ்நாடு13-வது மாடியில் இருந்து குதித்து பேராசிரியை தற்கொலை; திருச்சியை உறைய வைத்த அதிர்ச்சி சம்பவம்

    13-வது மாடியில் இருந்து குதித்து பேராசிரியை தற்கொலை; திருச்சியை உறைய வைத்த அதிர்ச்சி சம்பவம்

    திருச்சியில் அடுக்குமாடி குடியிருப்பின் 13-வது மாடியில் இருந்து பேராசிரியை தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

    திருச்சி எடமலைப்பட்டிபுதூரில்  அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருபவர் பிரேம் குமார். இவருடைய மனைவி சௌமியா இவருக்கு வயது 32. இவர்கள் இருவரும் காதல் திருமணம் செய்து கொண்டவர்கள். இவர்களுக்கு ரியா (11), சிவியா (6) என்ற இரு மகள்கள் உள்ளனர். 

    சௌமியா, திருச்சி தில்லைநகர் பகுதியில் உள்ள ஒரு கல்லூரியில் வணிகவியல் துறை பேராசிரியையாக பணியாற்றி வந்தார். பிரேம்குமார் பல தொழில்களில்  தன்னை ஈடுபடுத்தி வருகிறார். 

    இவருடன் சௌமியா அடுக்குமாடி குடியிருப்பின் 13-வது மாடியில் பி.பிளாக்கில் வசித்து வந்தார். இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு சௌமியா மாடியில் இருந்து கீழே  விழுந்து இறந்ததாக கூறப்படுகிறது. 

    இதையயடுத்து, அடுக்குமாடி குடியிருப்பில் இருப்பவர்கள் உடனடியாக எடமலைப்பட்டிபுதூர் காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர். அங்கு சென்ற காவல் ஆய்வாளர் பாலகிருஷ்ணன் தலைமையிலான காவல்துறயினர் அங்கு சென்று சௌமியாவின் உடலை மீது பிரேதபரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

    இந்தச் சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு சிகேத காவல்துறையினர், முதற்கட்ட விசாரணையில் சௌமியா நேற்று முன்தினம் இரவு 8 மணிக்கு மேல் வீட்டில் இருந்து துணி காய போடுவதற்காக வெளியே வந்ததாகவும், அதன்பிறகே அவர் மாடியில் இருந்து கீழே விழுந்து இறந்ததாகவும் கூறப்படுகிறது. 

    இந்நிலையில், அவர் துணிகளை காய வைத்தபோது நிலைத்தடுமாறி கீழே தவறி விழுந்து இறந்தாரா? இல்லை குடும்பத்தகராறு காரணமாக மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டாரா? இல்லை யாரேனும் அவரை கீழே தள்ளி கொலை செய்தார்களா? என பல்வேறு கோணங்களில் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். 

    இந்தச் சம்பவம் எடமலைப்பட்டிபுதூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    இதையும் படிங்க: வெறும் ரூ.1500 கடனுக்காக… இளைஞரை கயிற்றில் கட்டி 2 கி.மீ தூரம் இழுத்துச் சென்ற கொடூரர்கள்!

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....