Thursday, May 2, 2024
மேலும்
    Homeசெய்திகள்விளையாட்டுபுரோ கபடி: போராடி குஜராத்தை வீழ்த்திய தமிழ் தலைவாஸ்

    புரோ கபடி: போராடி குஜராத்தை வீழ்த்திய தமிழ் தலைவாஸ்

    புரோ கபடி போட்டியின் நேற்றைய ஆட்டத்தில் தமிழ் தலைவாஸ் அணி, குஜராத் ஜெயன்ட்ஸ் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.

    ஒன்பதாவது சீசனை எட்டியிருக்கும் புரோ கபடி போட்டிகள் கடந்த மாதம் 7-ஆம் தொடங்கியது. 12 அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் இப்போட்டி தற்போது ஹைதராபாத்தில் நடைபெற்று வருகிறது. 

    இந்த போட்டியில் நேற்று தமிழ் தலைவாஸ் மற்றும் குஜராத் அணிகளின் ஆட்டம் நடைபெற்றது. விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் தமிழ் தலைவாஸ் அணி 42-39 என்ற புள்ளி கணக்கில் குஜராத் ஜெயன்ட்ஸ் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.

    இதைத்தொடர்ந்து, நேற்று நடைபெற்ற மற்றொரு ஆட்டத்தில் டெல்லி மற்றும் பெங்களூரு அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் 52- 49 என்ற புள்ளி கணக்கில் பெங்களூரு அணி வெற்றி பெற்றது. 

    மேலும், இன்று நடைபெறவுள்ள ஆட்டங்களில் உத்தரபிரதேச யோத்தா  மற்றும் பெங்கால் வாரியர்ஸ் அணியும் , தெலுங்கு டைட்டன்ஸ் மற்றும் ஜெய்பூர் பிங்க் பேன்தர்ஸ் அணியும் மோதவுள்ளன. இந்த ஆட்டங்கள் இரவு 7.30 மணியளவில் தொடங்கவுள்ளது. 

    கால்பந்து உலகக் கோப்பை: நேற்றைய ஆட்ட முடிவுகள் என்னென்ன?

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....