புரோ கபடி போட்டியின் நேற்றைய ஆட்டத்தில் தமிழ் தலைவாஸ் அணி, குஜராத் ஜெயன்ட்ஸ் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.
ஒன்பதாவது சீசனை எட்டியிருக்கும் புரோ கபடி போட்டிகள் கடந்த மாதம் 7-ஆம் தொடங்கியது. 12 அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் இப்போட்டி தற்போது ஹைதராபாத்தில் நடைபெற்று வருகிறது.
இந்த போட்டியில் நேற்று தமிழ் தலைவாஸ் மற்றும் குஜராத் அணிகளின் ஆட்டம் நடைபெற்றது. விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் தமிழ் தலைவாஸ் அணி 42-39 என்ற புள்ளி கணக்கில் குஜராத் ஜெயன்ட்ஸ் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.
இதைத்தொடர்ந்து, நேற்று நடைபெற்ற மற்றொரு ஆட்டத்தில் டெல்லி மற்றும் பெங்களூரு அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் 52- 49 என்ற புள்ளி கணக்கில் பெங்களூரு அணி வெற்றி பெற்றது.
மேலும், இன்று நடைபெறவுள்ள ஆட்டங்களில் உத்தரபிரதேச யோத்தா மற்றும் பெங்கால் வாரியர்ஸ் அணியும் , தெலுங்கு டைட்டன்ஸ் மற்றும் ஜெய்பூர் பிங்க் பேன்தர்ஸ் அணியும் மோதவுள்ளன. இந்த ஆட்டங்கள் இரவு 7.30 மணியளவில் தொடங்கவுள்ளது.
கால்பந்து உலகக் கோப்பை: நேற்றைய ஆட்ட முடிவுகள் என்னென்ன?