புரோ கபடி போட்டியில் நேற்று நடைபெற்ற ஆட்டங்களில் பெங்களூர் புல்ஸ் மற்றும் தமிழ் தலைவாஸ் அணிகள் வெற்றிப்பெற்றன.
புரோ கபடி போட்டியின் 9-ஆவது சீசன் தற்போது ஹைதராபாத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அக்டோபர் மாதம் 7-ஆம் தேதி தொடங்கிய இப்போட்டி டிசம்பர் 17-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.
இந்நிலையில், புரோ கபடி போட்டியின் நேற்றைய ஆட்டங்களில் பாட்னா பைரேட்ஸ் மற்றும் பெங்களூர் புல்ஸ், தமிழ் தலைவாஸ் மற்றும் யுபி யுதாஸ் ஆகிய அணிகள் களம் கண்டன.
இந்த ஆட்டங்களில் பெங்களூர் புல்ஸ் அணி 44-30 என்ற புள்ளி கணக்கில் புனே பைரேட்ஸ் அணியை வீழ்த்தியது. இதையடுத்து, தமிழ் தலைவாஸ் மற்றும் யுபி யுதாஸ் இடையே நடைபெற்ற ஆட்டத்தில், 43 – 28 என்ற புள்ளி கணக்கில் தமிழ் தலைவாஸ் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் தமிழ் தலைவாஸ் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறியுள்ளது.
மேலும், இன்று இரவு 7.30 மணியளவில் நடைபெறவுள்ள புரோ கபடி போட்டியில் இரண்டு ஆட்டங்கள் நடைபெறவுள்ளன. அதில் பெங்கால் வாரியர்ஸ் மற்றும் தபாங் டெல்லி , ஹரியானா ஸ்டீலர்ஸ் மற்றும் தெலுங்கு டைட்டன்ஸ் ஆகிய அணிகள் மோதவுள்ளன.
விக்ரம் பட பாணியில் ‘தளபதி 67’… திட்டமிட்ட படக்குழு..