Monday, April 29, 2024
மேலும்
    Homeசெய்திகள்இந்தியாஇமாச்சலப் பிரதேசத்தில் பேருந்து விபத்து; பள்ளி மாணவர்கள் உள்பட 16 பேர் பலி!

    இமாச்சலப் பிரதேசத்தில் பேருந்து விபத்து; பள்ளி மாணவர்கள் உள்பட 16 பேர் பலி!

    இமாச்சலப் பிரதேசத்தில் தனியார் பேருந்து விபத்துக்குள்ளானதில் பள்ளிக் குழந்தைகள் உள்பட 16 பேர் பலியாகியுள்ளனர்.

    குலு மாவட்டத்தில் இருந்து சைஞ் பகுதிக்கு பள்ளி மாணவர்கள் உள்பட பொது மக்களை ஏற்றிச் சென்ற பேருந்து, இன்று காலை 8 மணியளவில் நியோலி-ஷான்சர் சாலையில் சென்றுக் கொண்டிருந்த போது சோல்ஜர் பள்ளத்தாக்கில் கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்தது. 

    இந்த விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் மீட்புப் படையினர் ஈடுபட்டு வருகின்றனர்.  இவர்களோடு அந்தப் பகுதி பொதுமக்களும் மீட்புப் பணியில் பங்கெடுத்து வருகின்றனர். 

    இதுவரை இந்த விபத்தில், பள்ளி மாணவர்கள் உள்பட 16 பேர் பலியாகியுள்ளதாக  தகவல்கள் வெளிவந்துள்ளது. படுகாயம் அடைந்தவர்கள் அருகில் இருக்கும் மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். 

    இந்த விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் நரேந்திர மோடி, மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், இமாச்சலப் பிரதேசத்தின் முதல்வர் ஜெய்ராம் தாகுர் ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

    காரைக்காலில் மருத்துவ அவசரநிலை- 144 தடை உத்தரவு பிறப்பிப்பு

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....