தூத்துக்குடியில் இளைஞர் ஒருவர் பிரியாணி சாப்பிட்டுக் கொண்டிருந்தபோது, சாப்பாட்டில் பூரான் இருந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தென்னிந்தியாவில் கடந்த சில மாதங்களாகவே சுகாதாரமற்ற உணவுமுறை குறித்த பல்வேறு செய்திகள் தொடர்ந்து வெளிவந்த வண்ணம் உள்ளன. இச்சூழலில், தூத்துக்குடி மாவட்டத்தில் சுகாதரமற்ற உணவு ஒன்று ஒட்டலில் பறிமாறப்பட்ட சம்பவம் தூத்துக்குடி வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளத்தில் செயல்பட்டு வரும் ஹோட்டல் ஒன்றில் வாலிபர் ஒருவர் நேற்று சிக்கன் பிரியாணி வாங்கி சாப்பிட்டுள்ளார். அப்போது அவர் சாப்பிட்டு கொண்டு இருந்தபோது கருப்பு நிற பூரான் ஒன்று உணவில் இருந்திருக்கிறது.
இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த அவர், உணவில் பூரான் கிடந்ததை தனது செல்போனில் வீடியோவாக எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்டு இருக்கிறார். அப்போது இந்த உணவகத்தில் உணவுத்துறை பாதுகாப்பு அதிகாரிகள் சோதனை செய்ய வேண்டும் என்று உணவு பிரியர்கள் கோரிக்கை வைத்திருக்கின்றனர்.
தமிழகத்தில் பல்வேறு ஓட்டல்களில் தரமற்ற உணவு வழங்கப்படுவதாக வரும் புகாரைத் தொடர்ந்து உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தி கடைகளுக்கு சீல் வைத்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
குடியிருப்புப் பகுதிக்குள் இறந்து கிடந்த புள்ளிமான்; காஞ்சிபுரத்தில் அதிர்ச்சி