Sunday, April 28, 2024
மேலும்
    Homeசெய்திகள்இந்தியாபிரதமர் மோடி மீது தாக்குதல் நடத்த திட்டம்! பாப்புலர் ஃப்ரன்ட்டுக்கு எதிராக அமலாக்கத்துறை குற்றச்சாட்டு

    பிரதமர் மோடி மீது தாக்குதல் நடத்த திட்டம்! பாப்புலர் ஃப்ரன்ட்டுக்கு எதிராக அமலாக்கத்துறை குற்றச்சாட்டு

    பாப்புலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியா என்ற அமைப்பு நரேந்திர மோடியின் பேரணியை குறிவைத்து தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளதாக அமலாக்க இயக்குநரகம் குற்றம்சாட்டியிருக்கிறது.

    எஸ்.டி.பி.ஐ மற்றும் பாப்புலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியா அமைப்பின் மூலமாக குழுக்களை உருவாக்கி, பல்வேறு தீவிரவாத பயிற்சிகள் மற்றும் சட்டவிரோத பண பரிவர்த்தனை நடைபெற்று வருவதாக என்.ஐ.ஏ அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்ததாக கூறப்படுகிறது. 

    அதன் அடிப்படையில் இந்தியா முழுவதும் நேற்று முதல் எஸ்.டி.பி.ஐ கட்சி நிர்வாகிகள் வீடுகள் மற்றும் பாப்புலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியா அலுவலகங்களில் சோதனையானது நடைபெற்று வருகிறது என முதற்கட்ட தகவல் வெளியாகி உள்ளது.

    இந்த நிலையில், பாப்புலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியா பாட்னாவில் பிரதமர் நரேந்திர மோடியின் பேரணியை குறிவைத்து தாக்குதல் நடத்த திட்டமிட்டதாகவும், ஆயுதங்கள் மற்றும் வெடிப்பொருள்களை சேகரித்து ஒரே நேரத்தில் முக்கிய இடங்களில் தாக்குதல் நடத்த திட்டமிட்டிருப்பதாகவும் அமலாக்க இயக்குநரகம் குற்றம்சாட்டியிருக்கிறது.

    இதையும் படிங்க: தொடரும் பெட்ரோல் குண்டு வீச்சு… கோவையில் பதற்றத்தை தணிக்க களமிறங்கிய அதிவிரைவு படையினர்!

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....