பாப்புலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியா என்ற அமைப்பு நரேந்திர மோடியின் பேரணியை குறிவைத்து தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளதாக அமலாக்க இயக்குநரகம் குற்றம்சாட்டியிருக்கிறது.
எஸ்.டி.பி.ஐ மற்றும் பாப்புலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியா அமைப்பின் மூலமாக குழுக்களை உருவாக்கி, பல்வேறு தீவிரவாத பயிற்சிகள் மற்றும் சட்டவிரோத பண பரிவர்த்தனை நடைபெற்று வருவதாக என்.ஐ.ஏ அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்ததாக கூறப்படுகிறது.
அதன் அடிப்படையில் இந்தியா முழுவதும் நேற்று முதல் எஸ்.டி.பி.ஐ கட்சி நிர்வாகிகள் வீடுகள் மற்றும் பாப்புலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியா அலுவலகங்களில் சோதனையானது நடைபெற்று வருகிறது என முதற்கட்ட தகவல் வெளியாகி உள்ளது.
இந்த நிலையில், பாப்புலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியா பாட்னாவில் பிரதமர் நரேந்திர மோடியின் பேரணியை குறிவைத்து தாக்குதல் நடத்த திட்டமிட்டதாகவும், ஆயுதங்கள் மற்றும் வெடிப்பொருள்களை சேகரித்து ஒரே நேரத்தில் முக்கிய இடங்களில் தாக்குதல் நடத்த திட்டமிட்டிருப்பதாகவும் அமலாக்க இயக்குநரகம் குற்றம்சாட்டியிருக்கிறது.
இதையும் படிங்க: தொடரும் பெட்ரோல் குண்டு வீச்சு… கோவையில் பதற்றத்தை தணிக்க களமிறங்கிய அதிவிரைவு படையினர்!