தமிழகத்தில் கடந்த வாரம் நடைபெற்ற பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவங்கள் எதிரொலியாக, பெட்ரோல் விற்பனை நிலையங்களில் கேன், பாட்டிலில் பெட்ரோல், டீசல் விற்க காவல்துறையினரால் தடை விதிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, திருச்சி மாவட்ட பகுதிகளில் உள்ள பெட்ரோல், டீசல் விற்பனை நிலையங்களில் பாட்டில், கேனில் பெட்ரோல் மற்றும் டீசல் விற்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
மேலும் திருவெறும்பூரில் பெட்ரோல் விற்பனை நிலையங்களில் இந்த உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த உத்தரவின் சுற்றறிக்கையை அங்குள்ள ஊழியர்களிடம் காவல்துறையினர் வழங்கினர். அதோடு பெட்ரோல், டீசல் நிரப்ப வந்த வாடிக்கையாளர்களிடமும் இது தொடர்பாக காவல்துறையினர் அறிவுரை வழங்கினர்.
இந்த திடீர் உத்தரவினை அறியாத சில பொதுமக்கள் கேனில் பெட்ரோல், டீசல் நிரப்ப வந்தார்கள். அவர்களிடமும் உத்தரவு குறித்து தெரிவித்து, கேனில் பெட்ரோல் வழங்க ஊழியர்கள் மறுப்பு தெரிவித்தனர்.
இதையும் படிங்க: ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா நிரந்தர உறுப்பினராக ரஷ்யா முழு ஆதரவு!