இண்டிகோ விமானத்தில் பயணியர் ஒருவர் ‘ஜன்னலைத் திறங்க, நான் குட்காவை துப்ப வேண்டும்.’ என பணிப்பெண்ணிடம் கேட்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
சமீப காலமாக விமானத்தில் நடைபெற்ற நிகழ்வுகள் பல இணையத்தில் வைரலாகி வருகின்றன. அவற்றுள் சில சம்பவங்கள் அதிர்ச்சியை ஏற்படுத்துவதாகவும், சில சம்பவங்கள் நகைச்சுவையாகவும் இருக்கின்றன.
இந்த விமான நிகழ்வுகளில் சமீபத்தில் நடைபெற்ற ஒரு சம்பவம் வீடியோவாக வெளிவந்து நெட்சன்களிடம் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. அந்த வீடியோவின் படி, இண்டிகோ விமானம் ஒன்று நடுவானில் விமானம் பயணித்துக்கொண்டிருக்கும்போது, பயணி ஒருவர் ‘ஜன்னலைத் திறங்க, நான் குட்காவை துப்ப வேண்டும்.’ எனக் கூறினார்.
தொடக்கத்தில் அதிர்ச்சியான பணிப்பெண், பின்பு நகைச்சுவை என்பதை புரிந்துக்கொண்டு சிரித்தார். இந்த நிகழ்வை கோவிந்த் சர்மா என்பவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
View this post on Instagram
கோவிந்த் சர்மா என்பவர் பகிர்ந்த இந்த இன்ஸ்டாகிராம் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகிவருகிறது. முன்னதாக, பா.ஜ.க எம்.பி தேஜஸ்வி சூர்யா, விமானம் தரையில் இருக்கும்போதே இண்டிகோ விமானத்தில் அவசரக் கதவைத் திறந்தது சர்ச்சையானது குறிப்பிடத்தக்கது.
ஆஸ்திரேலியாவில் கோயில்கள் சூறையாடல்; போராடிய நபர்கள் மீது காலிஸ்தான் அமைப்பினர் தாக்குதல்