குடியரசுத் தலைவர் தேர்தலில் எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த பல எம்பி-கள் மற்றும் எம்எல்ஏ-க்கள் பாஜக கூட்டணி வேட்பாளரான திரௌபதி முர்முவுக்கு வாக்களித்து உள்ளனர் என்பது தெரியவந்துள்ளது.
இந்தியாவில் 14-வது குடியரசுத் தலைவரான ராம்நாத் கோவிந்த்தின் பதவிக்கலாம் வரும் ஜூலை 24-ம் தேதி முடிவடைய உள்ளது. இதன்காரணமாக 15-வது குடியரசுத் தலைவரைத் தேர்வு செய்வதற்கான தேர்தல் கடந்த ஜூலை 18-ம் தேதி நடைபெற்றது.
இந்தத் தேர்தலில் பதிவான வாக்குகள் ஜூலை 21-ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் வெளியிடப்பட்டது.
இந்த தேர்தலில் பதிவான வாக்குகளின் அடிப்படையில், திரௌபதி முர்மு மொத்தம் 6,76,803 (64.03%) வாக்குகளும், யஷ்வந்த் சின்ஹா 3,80,177 (36%) வாக்குகளும் பெற்றதாக அறிவிக்கப்பட்டது.
நாடு முழுவதும் பதிவான எம்.பி-க்கள், எம்எல்ஏ-க்களின் வாக்குகளில் திரௌபதி முர்மு 2,824 எம்எல்ஏ-க்களின் வாக்குகளையும் 540 எம்.பி-க்களின் வாக்குகளையும் பெற்றார். அதேபோல், யஷ்வந்த் சின்ஹா 1,877 எம்எல்ஏ-க்களின் வாக்குகளையும் 208 எம்.பி-க்களின் வாக்குகளையும் பெற்றார்.
இதன்மூலம், இந்தியாவின் 15-வது குடியரசுத் தலைவராக திரௌபதி முர்மு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில், எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த பல்வேறு எம்பி-க்கள் மற்றும் எம்எல்ஏ-க்கள் அவர்கள் திரௌபதி முர்முவுக்கு வாக்களித்து உள்ளனர். அதன்படி, எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த மொத்தம் 17 எம்பி-க்கள் மற்றும் 104 எம்எல்ஏ-க்களும் திரௌபதி முர்முவுக்கு வாக்களித்து உள்ளனர் என தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும் கட்சி மாறி வாக்களித்தவர்கள் யார் என்பது குறித்த தகவல்கள் வெளியாகவில்லை.
இந்திய அரசியலமைப்பைக் காப்பாரா புதிய குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு?