ஓ.பன்னீர்செல்வம் தரப்பு மாவட்டச் செயலாளர்களின் ஆலோசனை கூட்டம் வருகிற ஜனவரி 23-ஆம் தேதி சென்னையில் நடைபெற உள்ளது.
ஈரோடு கிழக்கு சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினரான திருமகன் ஈ.வெ.ரா உயிரிழந்ததைத் தொடர்ந்து, இந்தத் தொகுதி காலியானதாக தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, இந்திய தேர்தல் ஆணையம் கடந்த 18 ஆம் தேதி ஈரோடு கிழக்கு தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
அதன்படி, ஜனவரி 31 ஆம் தேதி வேட்புமனு தாக்கலும் அதைத்தொடர்ந்து பிப்ரவரி 27 ஆம் தேதி வாக்குப்பதிவும், இதைத்தொடர்ந்து மார்ச் 2 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் நேற்று முதல் தேர்தல் விதிமுறைகளும் நடைமுறைக்கு வந்து இருக்கின்றன.
இந்நிலையில் தான் ஈரோடு கிழக்கு தொகுதி தேர்தல் தொடர்பாக ஓ.பன்னீர்செல்வம் தரப்பு மாவட்டச் செயலாளர்களின் ஆலோசனை கூட்டம் வருகிற ஜனவரி 23-ஆம் தேதி சென்னையில் நடைபெற இருக்கிறது. இந்தக் கூட்டத்தில் முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பட்டம் விட்ட சிறுவனின் மீது பாய்ந்த மின்சாரம் – பெங்களூரில் நேர்ந்த சோகம்