Tuesday, March 19, 2024
மேலும்
    Homeசெய்திகள்இந்தியாகுடியரசுத் தலைவரின் காவலர்களுக்கான விருது; தமிழக காவலர்கள் 3 பேருக்கு அறிவிப்பு

    குடியரசுத் தலைவரின் காவலர்களுக்கான விருது; தமிழக காவலர்கள் 3 பேருக்கு அறிவிப்பு

    குடியரசுத் தினத்தை முன்னிட்டு குடியரசுத் தலைவரால் அறிவிக்கப்படும் காவலர்களுக்கான விருது தமிழகத்தைச் சேர்ந்த 3 பேருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. 

    நாளை நாடு முழுவதும் 74 ஆவது குடியரசுத் தின விழா கொண்டாடப்படுகிறது. இந்நிலையில் நாளை தில்லியில் நடைபெறும் விழாவில் எகிப்து அதிபர் அப்தெல் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்கிறார். 

    நாளை நடைபெறும் குடியரசுத் தின விழாவில் சுமார் 60 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. அதே சமயம், தில்லி செங்கோட்டையில் பிரதமர் மோடி கொடியேற்றி வைத்து நாளை மக்களுக்கு உரையாற்ற உள்ளார். 

    இந்நிலையில், குடியரசுத் தினத்தை முன்னிட்டு குடியரசுத் தலைவரால் அறிவிக்கப்படும் காவலர்களுக்கான விருது தமிழகத்தைச் சேர்ந்த 3 காவலர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. 

    அதன்படி, சென்னை ஐஜி தேன்மொழி, செங்கல்பட்டு எஸ்.பி பொன் ராமு, அரியலூர் ஏஎஸ்பி ரவி சேகரன் ஆகியோருக்கு விருது அறிவிக்கப்பட்டது. அதேபோல், குடியரசுத் தலைவரின் மெச்சத்தக்க சேவைக்கான விருது தமிழகத்தைச் சேர்ந்த 21 காவல்துறை அதிகாரிகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

    சித்த மருத்துவர் ஷர்மிகாவிடம் மருத்துவ இயக்குனரக அதிகாரிகள் விசாரணை

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....