Friday, May 3, 2024
மேலும்
    Homeசெய்திகள்புதுச்சேரிவடகிழக்கு பருவமழை : பாதிக்கப்பட்ட மக்களுக்கு அதிமுக சார்பில் நிவாரணம்

    வடகிழக்கு பருவமழை : பாதிக்கப்பட்ட மக்களுக்கு அதிமுக சார்பில் நிவாரணம்

    அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் இடைக்கால பொதுச் செயலாளரும் தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சருமான எதிர்க்கட்சித் தலைவர் மாண்புமிகு எடப்பாடியார் ஆணைப்படி புதுச்சேரி உப்பளம் தொகுதியில் மழையால் பாதிக்கப்பட்ட 1000-க்கும் மேற்பட்ட மக்களுக்கு அதிமுக கிழக்கு மாநில செயலாளர் அன்பழகன் பிரட் உள்ளிட்ட உணவுப்பொருட்களை வழங்கினார்.

    தமிழகம் மற்றும் புதுச்சேரி மாநிலத்தில் கடந்த சில தினங்களாக கன மழை பெய்து வருகிறது. இதனால் பலதரப்பட்ட மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் கழகத்தின் இடைக்கால பொதுச் செயலாளரும் தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சருமான தமிழகத்தின் எதிர்க்கட்சித் தலைவர் மாண்புமிகு எடப்பாடியார் அவர்கள் தொடர்மழையால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு மனிதாபமான அடிப்படையில் இயன்ற உதவிகளை செய்ய கழக தொண்டர்களுக்கு ஆணையிட்டிருந்தார்கள்.

    அதன் அடிப்படையில் புதுச்சேரி மாநிலத்தில் உப்பளம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கடற்கரையோரம் மற்றும் ஏரிப்பகுதியில் பெருமழையால் பாதிக்கப்பட்ட 1000-க்கும் மேற்பட்ட மக்களுக்கு பிரட் உள்ளிட்ட நிவாரண உணவு பொருட்களை புதுச்சேரி மாநிலக் கழக செயலாளர் அன்பழகன் அவர்கள் வழங்கினார்.

    இந்த நிகழ்ச்சியில் அண்ணா தொழிற்சங்கை பேரவை செயலாளர் பாப்புசாமி, மாநில துணை செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, தொகுதி கழக செயலாளர் துரை, அம்மா பேரவை மாநில துணை செயலாளர் சக்திவேல் மற்றும் ரமேஷ், பெரியசாமி, குணாளன் உள்ளிட்ட கழக நிர்வாகிகள் இதில் கலந்து கொண்டனர்.

    இதையும் படிங்க: ‘நம்மை நோக்கி வரும் சக்கரம்’ மழை குறித்து தமிழ்நாடு வெதர்மேன் சூசக எச்சரிக்கை!

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....