நடப்பு கல்வியாண்டில் பொது காலாண்டு தேர்வு இல்லை என பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் கடந்த இரண்டு வருடங்களுக்குப் பிறகு, நடப்பு கல்வி ஆண்டில் அனைத்து பள்ளிகளும் திறக்கப்பட்டு மாணவ-மாணவிகளுக்கு நேரடி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில், மாணவர்களின் கல்வித் திறனை கருத்தில் கொண்டு அரசு பல்வேறு திட்டங்களையும் செயல்படுத்தி வருகிறது.
இதையும் படிங்க: காலை சிற்றுண்டி வழங்கும் திட்டம் – தொடங்கி வைத்தார் மு.க.ஸ்டாலின்
இந்நிலையில், பள்ளிகளில் நடப்பாண்டில் பொது காலாண்டு தேர்வு இல்லை என பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. அதேபோல், பள்ளிகளில் ஒவ்வொரு மாவட்டத்திலும் வெவ்வேறு தேதிகளில், காலாண்டு தேர்வு நடத்த நடவடிக்கை எடுக்கவும் பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
மேலும் அனைத்து பள்ளிகளிலும் இம்மாதம் 30 ஆம் தேதிக்குள் காலாண்டு தேர்வுகளை நடத்தி முடிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.