Sunday, March 17, 2024
மேலும்
    Homeபொழுதுபோக்குசினிமா செய்திகள்தாய் கிழவி என்று அழைக்கும் ரசிகர்கள் - மறுக்கும் நித்யா மேனன்!

    தாய் கிழவி என்று அழைக்கும் ரசிகர்கள் – மறுக்கும் நித்யா மேனன்!

    தாய் கிழவி என்று என்னை அழைக்க வேண்டாம் என நடிகை நித்யா மேனன் ரசிகர்களுக்கு வேண்டுகோள்விடுத்துள்ளார்.

    தனுஷ் நடித்து சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் கடந்த ஆகஸ்ட் 18-ம் தேதி திருச்சிற்றம்பலம் திரைப்படம் வெளியானது. யாரடி நீ மோகனி, குட்டி, உத்தமபுத்திரன் படங்களுக்கு பிறகு மித்ரன் ஜவகர் 4-வது முறையாக நடிகர் தனுஷை திருச்சிற்றம்பலம் திரைப்படத்தின் மூலம் இயக்கியுள்ளார். மேலும் நீண்ட இடைவேளைக்கு பிறகு தனுஷ் படத்துக்கு அனிருத் இசையமைத்துள்ளார். இக்காரணங்களால் இயல்பாகவே, திருச்சிற்றம்பலம் திரைப்படத்தின் மீது ரசிகர்களிடத்தில் எதிர்பார்ப்பு எழுந்தது. 

    இந்நிலையில், திரையரங்குகளில் வெளியான திருச்சிற்றம்பலம் திரைப்படத்துக்கு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்துவருகிறது. மேலும், இதுவரை ரூ.50 கோடிக்கும் அதிகமாக இப்படம் வசூலித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

    இந்த படத்தில் ஷோபனா என்ற வேடத்தில் நடிகை நித்யா மேனன் நடித்திருந்தார். அவரது நடிப்பு ரசிகர்களைப் பெரிதும் கவர்ந்துள்ளது. மேலும், இத்திரைப்படத்தில் அனிருத் இசையில் தனுஷ் எழுதி பாடிய ‘தாய் கிழவி‘ என்ற பாடல் மிக பிரபலமாகியுள்ளது.

    இதைத் தொடர்ந்து, சமூக வலைதளங்களில் நித்யா மேனனை தாய் கிழவி என ரசிகர்கள் குறிப்பிட்டு வருகின்றனர். இந்த நிலையில் நித்யா மேனன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரசிகர்களுடன் சமீபத்தில் உரையாடினார். அப்போது, தன்னை யாரும் தாய் கிழவி என்று அழைக்க வேண்டாம் எனவும் தனக்கு அதில் ஆர்வம் இல்லை எனவும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....