Sunday, March 17, 2024
மேலும்
    Homeசெய்திகள்விளையாட்டுவீரர், வீராங்கனைகளுக்கு இனி ஓரே சம்பளம் - கிரிக்கெட் வாரியம் முடிவு!

    வீரர், வீராங்கனைகளுக்கு இனி ஓரே சம்பளம் – கிரிக்கெட் வாரியம் முடிவு!

    நியூசிலாந்து கிரிக்கெட் அணிக்காக விளையாடும் வீரர், வீராங்கனைகளுக்குச் சம ஊதியம் அளிக்கவுள்ளதாக நியூசிலாந்து கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.

    ஆடவர் அணி, மகளிர் அணி என இரு பிரிவுகளாக கிரிக்கெட் போட்டிகள் நடைபெற்று வருகிறது. இவற்றுள் ஆடவர் அணியில் இடம்பெறும் வீரர்களுக்கு மகளிர் அணியில் இடம்பெறும் வீராங்கனைகளுக்கும் இடையில் அதிக வித்தியாசங்கள் இருந்து வருகிறது.

    இந்நிலையில், வீரர், வீராங்கனைகளுக்குச் சமமான ஊதியத்தை வழங்க நியூசிலாந்து கிரிக்கெட் வாரியம் முன்வந்துள்ளது. அதன்படி, இனிமேல் டெஸ்ட் ஆட்டங்களில் விளையாடும் நியூசிலாந்து வீரர், வீராங்கனைகளுக்குத் தலா ரூ. 5 லட்சமும், ஒரு நாள் கிரிக்கெட்டில் இடம்பெறும் வீரர், வீராங்கனைகளுக்குத் தலா ரூ. 1.22 லட்சமும் வழங்கப்படும் என நியூசிலாந்து கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. 

    இந்த அறிவிப்பானது வருகிற ஆகஸ்ட் மாதம் 1-ம் தேதியில் இருந்து நடைமுறைக்கு வர இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நியூசிலாந்து கிரிக்கெட் வாரியத்தின் இந்த முடிவுக்குப் பாராட்டுகள் குவிந்த வண்ணம் உள்ளன. 

    நிலவை நோக்கி பயணத்தைத் தொடங்கிய செயற்கைகோள்!

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....