எடப்பாடி பழனிசாமி இடைக்கால பொதுச்செயலாளராகத் தேர்வு செய்யப்பட்டதை அங்கீகரிக்கக் கூடாது என சென்னை உயர்நீதிமன்றத்தில் புதிய வழக்கு தொடரப்பட்டுள்ளது.
அதிமுகவில் தற்போது பல்வேறு குழப்பங்கள் நீடித்து வருகின்றன. இந்தச் சூழலில் அதிமுக இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டதை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டு உள்ளது. திண்டுக்கல்லைச் சேர்ந்த அதிமுக உறுப்பினர் சூரிய மூர்த்தி என்பவர் இந்த வழக்கைத் தொடர்ந்து உள்ளார். கடந்த ஜூலை 11ஆம் தேதி நடந்த அதிமுக பொதுக்குழு தீர்மானங்களுக்கு எதிராக இந்த வழக்கைச் சூரிய மூர்த்தி தொடர்ந்து இருக்கிறார்.
இதையும் படிங்க: “10,000 பேருக்கு வேலைவாய்ப்பு” ரூ.600 கோடி செலவில் நம்ம மதுரையிலும் ”டைடல் பூங்கா”!
இந்த வழக்கில், பொதுக்குழுவை எதிரத்த மனு உரிமையியல் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதால் எடப்பாடி பழனிசாமி இடைக்கால பொதுச்செயலாளராகத் தேர்வு செய்யப்பட்டதை அங்கீகரிக்கக் கூடாது என மனுவில் சூர்யகுமார் தெரிவித்து உள்ளார்.
இந்த வழக்கானது சென்னை உயர் நீதிமன்றத்தில் அடுத்த விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.