அதிமுக பொருளாளராக திண்டுக்கல் சீனிவாசன் நியமிக்கப்படுவதாக அதிமுக கட்சியின் இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
சென்னையில், வானகரத்தில் உள்ள தனியார் மண்டபத்தில் இன்று அதிமுக பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இந்தப் பொதுக்குழு கூட்டம் இன்று காலை 9 மணியளவில் தொடங்கியது.
இந்த பொதுக்குழு கூட்டத்தில், எடப்பாடி பழனிசாமி அதிமுக-வின் இடைக்கால பொதுச் செயலளாராக ஒரு மனதாக தேர்வு செய்யப்பட்டார்.
இதனைத் தொடர்ந்து பேசிய எடப்பாடி பழனிசாமி கூறியதாவது:
இத்தனை ஆண்டு காலம் அதிமுகவுக்கு விசுவசமாக இருந்து என்னால் முடிந்த நன்மைகளை செய்து இருக்கிறேன். உங்களின் ஒருவராக தற்போது வரை செயல்பட்டு வருகிறேன். முதல்வராக இருந்தபோதும் உங்களில் ஒருவராகத்தான் செயல்பட்டேன். கட்சியின் பொதுச் செயலாளராக இருந்து உங்களில் ஒருவராக செயல்படுவேன் என்று தெரிவித்தார்.
மேலும், எடப்பாடி பழனிசாமி பேசுகையில், அதிமுக கட்சியின் பொருளாளராக திண்டுக்கல் சீனிவாசன் நியமிக்கப்படுவதாக அறிவித்தார்.
அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் ஓ. பன்னீர்செல்வத்தை கட்சியிலிருந்து நீக்க சிறப்புத் தீர்மானம் கொண்டுவரப்பட்டு நிறைவேற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.
அதிமுக தலைமை அலுவலகத்துக்கு சீல்!