‘தேவைப்பட்டால் நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் விசாரணைக்கு அழைக்கப்படுவார்கள்’ என மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
சென்னை எழும்பூர் குடும்ப நல பயிற்சி மையத்தில், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவரிடம் நயன்தாரா – விக்னேஷ் சிவன் தம்பதியினர் குழந்தை விவகாரம் தொடர்பாக கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதலளித்த அவர், எந்த மருத்துவமனையை அணுகி இரட்டைக் குழந்தை பிறந்தது என்பதை மருத்துவத் துறை கண்டறிந்துள்ளது என்றும், இதுதொடர்பாக, சுகாதாரத் துறை இணை இயக்குனர் தலைமையில் 3 பேர் கொண்ட குழு அமைத்து விசாரணை நடைபெற்று வருகிறது என்றும் தெரிவித்துள்ளார்.
மேலும், ‘யார் யார் தவறு செய்துள்ளார்கள், இதில் சட்டம் மற்றும் விதிமீறல்களில் ஈடுபட்டு உள்ளார்களா என்பதைக் கண்டறிந்து, ஒரு வார காலத்தில் ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பிக்கப்படும். தேவைப்பட்டால் இருவரும் விசாரணைக்கு அழைக்கப்படுவார்கள்’ என்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: இந்தியாவில் 3ஜி, 4ஜி மொபைல்களின் உற்பத்தி நிறுத்தமா? மத்திய அரசு கூட்டத்தில் நடந்தது என்ன?