Sunday, March 17, 2024
மேலும்
    Homeசெய்திகள்அரசியல்அண்ணாமலை பேச்சுக்கு பதில் சொல்ல எனக்கு தகுதி இல்லை- ஈ.வி.கே.எஸ் இளங்கோவன்

    அண்ணாமலை பேச்சுக்கு பதில் சொல்ல எனக்கு தகுதி இல்லை- ஈ.வி.கே.எஸ் இளங்கோவன்

    அண்ணாமலை மிகப்பெரிய மனிதர் அவருக்கு பதில் சொல்லும் அளவுக்கு தனக்கு தகுதி இல்லை என ஈரோடு கிழக்கு தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் தெரிவித்துள்ளார். 

    ஈரோடு கிழக்கு தொகுதி மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் போட்டியிடுகிறார். இந்நிலையில் இன்று அவர் கிழக்கு தொகுதி தேர்தல் அலுவலகத்தில் வேட்புமனு தாக்கல் செய்தார். 

    இதைத்தொடர்ந்து, ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர், திருமகன் ஈ.வே.ரா விட்டுச் சென்ற பணிகளை தொடர்ந்து இந்தத் தொகுதியில் மேற்கொள்ள வேண்டும் என்பதற்காக அவர் போட்டியிடுவதாகவும், ஈரோட்டில் நிலவும் போக்குவரத்து நெரிசல், சாய கழிவுநீர் பிரச்சனை போன்றவற்றுக்கு தீர்வு காண உள்ளதாக கூறினார். 

    “அதிமுக ஓபிஎஸ், இபிஎஸ் அணிகளை சேர்க்க அண்ணாமலை முயற்சித்து வருவதாக சொல்கிறார்கள். இந்த நேரத்தில் எதற்கு அவரைப்பற்றி எல்லாம் கேள்வி கேட்கிறீர்கள்? அவர் பேச்சுக்கு எல்லாம் பதில் சொல்லிக் கொண்டு நேரத்தை வீணாக்க விரும்பவில்லை. அண்ணாமலை மிகப்பெரிய மனிதர்; அவருக்கு பதில் சொல்லும் அளவுக்கு தனக்கு தகுதி இல்லை” என ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் தெரிவித்தார்.

    184 பயணிகளுடன் பறந்த விமானம்; திடீரென பிடித்த தீ

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....