அண்ணாமலை மிகப்பெரிய மனிதர் அவருக்கு பதில் சொல்லும் அளவுக்கு தனக்கு தகுதி இல்லை என ஈரோடு கிழக்கு தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் தெரிவித்துள்ளார்.
ஈரோடு கிழக்கு தொகுதி மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் போட்டியிடுகிறார். இந்நிலையில் இன்று அவர் கிழக்கு தொகுதி தேர்தல் அலுவலகத்தில் வேட்புமனு தாக்கல் செய்தார்.
இதைத்தொடர்ந்து, ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர், திருமகன் ஈ.வே.ரா விட்டுச் சென்ற பணிகளை தொடர்ந்து இந்தத் தொகுதியில் மேற்கொள்ள வேண்டும் என்பதற்காக அவர் போட்டியிடுவதாகவும், ஈரோட்டில் நிலவும் போக்குவரத்து நெரிசல், சாய கழிவுநீர் பிரச்சனை போன்றவற்றுக்கு தீர்வு காண உள்ளதாக கூறினார்.
“அதிமுக ஓபிஎஸ், இபிஎஸ் அணிகளை சேர்க்க அண்ணாமலை முயற்சித்து வருவதாக சொல்கிறார்கள். இந்த நேரத்தில் எதற்கு அவரைப்பற்றி எல்லாம் கேள்வி கேட்கிறீர்கள்? அவர் பேச்சுக்கு எல்லாம் பதில் சொல்லிக் கொண்டு நேரத்தை வீணாக்க விரும்பவில்லை. அண்ணாமலை மிகப்பெரிய மனிதர்; அவருக்கு பதில் சொல்லும் அளவுக்கு தனக்கு தகுதி இல்லை” என ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் தெரிவித்தார்.
184 பயணிகளுடன் பறந்த விமானம்; திடீரென பிடித்த தீ