Saturday, May 4, 2024
மேலும்
    Homeசெய்திகள்தமிழ்நாடுமுல்லை பெரியாறு அணையின் நீர்மட்டம் உயர்வு; கேரள பகுதிக்கு 2ம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை

    முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டம் உயர்வு; கேரள பகுதிக்கு 2ம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை

    முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டம் 138 அடியை எட்டி இருப்பதால், கேரள பகுதிக்கு இரண்டாம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு இருக்கிறது. 

    தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து உள்ளது. இதனால் வங்கக் கடலில் உருவாகும் காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தமிழகத்தின் பல மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. 

    தொடர்ந்து மழை காரணமாக தமிழகத்தில் உள்ள அணைகளும் ஏரிகளும் நிரம்பி வருகின்றன. அதேபோல் முல்லை பெரியாறு அணை பகுதிகளிலும் தொடர் மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக சில தினங்களுக்கு முன்பு அப்பகுதியில் முதற்கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது. 

    இந்நிலையில், இன்று முல்லை பெரியார் அணையின் நீர்மட்டம் 138 அடியை எட்டியுள்ளதால், கேரள பகுதிகளுக்கு இரண்டாம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

    இன்று காலை 10 மணி நிலவரப்படி, அணைக்கான நீர்வரத்து, 1,542 கன அடியாக இருந்தது. ருல்கர்வ் என்ற முறைப்படி வருகிற 20 ஆம் தேதி வரை அணையின் நீர்மட்டத்தை 141 அடி வரை உயர்த்திக்கொள்ள முடியும். அதன் பிறகு அணைக்கு வரும் நீரை கேரள பகுதிக்கு திறந்துவிட வேண்டிய நிலை உருவாகியுள்ளது. இதன் காரணமாக கேரள பகுதிக்கு இரண்டாம் கட்ட வெள்ள அபாயா எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    இதையும் படிங்ககால்பந்தாட்ட வீராங்கனை ப்ரியாவின் மரணம் தாங்க முடியாத துயரம்! முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....