சிவாஜி கணேசனின் வெண்கல சிலைக்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் 95-வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. இந்நிலையில் தமிழகம் முழவதும் ரசிகர்களும், தலைவர்களும் நடிகர் திலகம் சிவாஜி கணேசனை பற்றி சிலாகித்தும், புகைப்படங்களுக்கு மரியாதை செலுத்தியும் வருகின்றனர்.
இந்நிலையில், சிவாஜி கணேசனின் வெண்கல சிலைக்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர்தூவி மரியாதை செலுத்தினார். மேலும், சென்னை அடையாறில் உள்ள மணிமண்டபத்திற்கு வெளியே அமைக்கப்பட்டுள்ள சிவாஜி கணேசனின் சிலைக்கு அமைச்சர்கள், மா.சுப்பிரமணியன், சேகர்பாபு, துரைமுருகன், கே.என்.நேரு, மதிவேந்தன், எ.வ.வேலு, சென்னை மேயர் பிரியா, தமிழக மாநில காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, கவிஞர் வைரமுத்து, நடிகர் பிரபு மற்றும் அவரது குடும்பத்தினர் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.
இதைத்தொடர்ந்து, சிவாஜி கணேசனின் சிலைக்கு கவிஞர் வைரமுத்து, நடிகர் பிரபு, நடிகர் ராஜேஷ், இயக்குநர் ஆர்.கே.செல்வமணி உள்ளிட்டோரும் மரியாதை செலுத்தினர்.
இதையும் படிங்க:பொன்னியின் செல்வன் படவெளியீடு சமூக வலைத்தளங்களில் வைரலாகும் மீம்கள்