Friday, May 3, 2024
மேலும்
    Homeசெய்திகள்தமிழ்நாடுமேட்டூர் அணை அப்டேட்...பாசனத்திற்கு வினாடிக்கு 500 கன அடி நீர் திறப்பா?

    மேட்டூர் அணை அப்டேட்…பாசனத்திற்கு வினாடிக்கு 500 கன அடி நீர் திறப்பா?

    மேட்டூர் அணை நீர்மட்டம் 120 அடியாகவும், நீர் இருப்பு 93.47 டி.எம்.சியாகவும் உள்ளது.

    கர்நாடகா மாநிலத்தில் பெய்து வரும் கன மழை காரணமாக அங்குள்ள அணைகள் நிரம்பியுள்ளது. அணைகளில் இருந்து அதிக அளவு தண்ணீர் திறந்து விடப்படுவதால் ஓகேனக்கல்லுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால் மேட்டூர் அணையில் நீர்வரத்து உயர்ந்தது. 

    நேற்று முன்தினம் மேட்டூர் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு விநாடிக்கு 8000 கனஅடி வீதம் திறக்கப்பட்டு வந்த நிலையில், 20,000 கன அடி வீதம் திறப்பு அதிகரிக்கப்பட்டது. அதே சமயம், கிழக்கு மேற்கு கால்வாய் பாசனத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவு 900 கன அடியிலிருந்து 500 கன அடியாக குறைக்கப்பட்டது. 

    இதையும் படிங்க:தமிழகத்தில் இந்தியாவின் முதல் தேவாங்கு சரணாலாயம் – வெளிவந்த அறிவிப்பு!

    இந்நிலையில், மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு இன்று காலை வினாடிக்கு 29,000 கன அடியிலிருந்து வினாடிக்கு 28,000 கன அடியாக குறைந்துள்ளது. மேலும், அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு நீர்மின் நிலையங்கள் வழியாக வினாடிக்கு 22,000 கனஅடி வீதமும், உபரி நீர் போக்கி வழியாக வினாடிக்கு 5,000 கனஅடி வீதமும் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.

    தற்போதைய நிலவரப்படி, மேட்டூர் அணையின் கிழக்கு-மேற்கு கால்வாய் பாசனத்திற்கு வினாடிக்கு 500 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. மேட்டூர் அணை நீர்மட்டம் 120 அடியாகவும், நீர் இருப்பு 93.47 டி.எம்.சியாகவும் உள்ளது.

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....