Monday, May 6, 2024
மேலும்
    Homeசெய்திகள்இந்தியாபெண்கள் கல்லூரிக்குள் சுவர் ஏறி குதித்த ஆண்கள் கல்லூரி மாணவர்கள்; வைரலான காட்சிகள்

    பெண்கள் கல்லூரிக்குள் சுவர் ஏறி குதித்த ஆண்கள் கல்லூரி மாணவர்கள்; வைரலான காட்சிகள்

    தில்லியில் பெண்கள் கல்லூரிக்குள் சுவர் ஏறி குதித்த ஆண்கள் கல்லூரி மாணவர்கள் சாகசம் செய்த காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளது. 

    தில்லி பல்கலைக்கழகத்தின் கட்டுப்பாட்டில் மிரண்டா ஹவுஸ் பெண்கள் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் கடந்த அக்டோபர் 14 ஆம் தேதி மிரண்டா பெண்கள் கல்லூரியில் தீபாவளி கொண்டாட்டம் சிறப்பாக நடந்தது. 

    இந்தக் கொண்டாட்டத்தில் கல்லூரி மாணவிகள் கலந்துகொண்டும், பல கலைநிகழ்ச்சிகளில் பங்கு கொண்டும் விழாவை சிறப்பித்தனர். இந்த தீபாவளி கொண்டாட்டத்தில் வேறு கல்லூரிகளை சேர்ந்தவர்களும் பங்கேற்க அனுமதி வழங்கப்பட்டிருந்தது. 

    இந்நிலையில், கூட்டம் அதிகரித்ததால், பெண்கள் கல்லூரியின் நுழைவு வாயில் மூடப்பட்டது. அதனால், ஆண்கள் கல்லூரியைச் சேர்ந்த மாணவர்கள் சிலர் பெண்கள் கல்லூரியின் சுவர் ஏறி குதித்து உள்ளே நுழைந்தனர். 

    அதன் பின்னர், அந்த மாணவர்கள் ராமஜாஸ் ஆண்கள் கல்லூரியைச் சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்தது. மேலும் அவர்கள் ஆபாச வார்த்தைகளை பயன்படுத்தியதாகவும் கூறப்படுகிறது. இந்தச் சம்பவம் குறித்து காவல்துறை விசாரணை நடத்தி வருகிறது. 

    தற்போது மாணவர்கள் சுவர் ஏறி குதித்த காட்சிகள் வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. 

    இதையும் படிங்க: மனிதர்கள் ஒருவொருக்கொருவர் டெலிபதி செய்ய முடியுமா ?நீங்கள் அறிந்திராத சுவாரஷ்ய தகவல்கள்..

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....