சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியாகவுள்ள மாவீரன் திரைப்படம் குறித்த அப்டேட் வெளிவந்துள்ளது.
டாக்டர்,டான் என வரிசையாக வெற்றித்திரைப்படங்களை கொடுத்த சிவகார்த்திகேயன் சமீபத்தில் வெளிவந்த பிரின்ஸ் திரைப்படத்தின் மூலம் சற்றே சறுக்கலை சந்தித்தார். இந்நிலையில், இந்த சறுக்கலுக்கு நேரெதிராக வெற்றி பெற வேண்டுமென்ற நோக்கத்தில் தற்போது சிவகார்த்திகேயன் இயங்கி வருகிறார்.
சிவகார்த்திகேயன் தற்போது, தேசிய விருது பெற்ற இயக்குநர் மடோனா அஸ்வின் இயக்கத்தில் ‘மாவீரன்’ என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். மடோனா அஸ்வின் முன்னதாக யோகிபாபு நடிப்பில் வெளிவந்து நல்ல வரவேற்பை பெற்ற ‘மண்டேலா’ என்ற திரைப்படத்தை இயக்கியிருந்தார்.
வித்தியாசமான கூட்டணியாக சிவகார்த்திகேயன்-மடோனா அஸ்வின் கூட்டணி இருக்குமென்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் திரைப்படத்தின் மீது எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. மேலும், மாவீரன் திரைப்படத்தில் பிரபல இயக்குநர் மிஷ்கின், சரிதா, யோகிபாபு போன்றோர் நடிக்கிறார்கள். இதில் ஷங்கரின் மகள் அதிதி ஷங்கர் நாயகியாக நடித்துள்ளார்.
ஏறத்தாழ, 40 சதவிகிதம் படப்பிடிப்பு முடிந்த நிலையில், மாவீரன் திரைப்படத்தின் படப்பிடிப்புகள் நின்றுவிட்டதாக செய்திகள் வந்தன. சிவகார்த்திகேயன் சில காட்சிகளை வைக்க வேண்டுமென கூறியதாகவும், இயக்குநர் மடோனா அஸ்வின் மாட்டேன் என்று கூறியதால் இருவருக்குமிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளதால் படப்பிடிப்பு தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்தன.
ஆனால், இந்த தகவல்களில் உண்மையல்ல என்று தெரிவிக்கப்பட்டது. அதன்படியே, மாவீரன் படத்தின் படப்பிடிப்புகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில், மாவீரன் திரைப்படத்தில் சிவகார்த்திகேயன் சார்ந்த படப்பிடிப்பகள் முடிவடைந்துவிட்டதாக தகவல்கள் உலவின. ஆனால், இத்தகவலில் உண்மை இல்லை என்றும் , டிசம்பர் 10-ஆம் தேதி வரையில் சிவகார்த்திகேயன் நடிக்கவுள்ள காட்சிகள் படமாக்கப்படவுள்ளது என்றும், படத்தின் படப்பிடிப்புகள் ஜனவரி மாதம் வரை நடைபெறவுள்ளதாகவும் சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்தோனேஷியா நிலநடுக்கம்; 300-ஐ தொட்ட பலி எண்ணிக்கை