ரசிகர்களின் மிகுந்த ஆரவாரத்துக்கு மத்தியில் பொன்னியின் செல்வன் திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.
பிரபல இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில், விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, பிரகாஷ்ராஜ், பிரபு, சரத்குமார், திரிஷா, ஐஸ்வர்யா ராய் போன்ற பல முன்னணி நடிகர்கள் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம்தான், பொன்னியின் செல்வன்.
இரு பாகங்களாக உருவாகியுள்ள பொன்னியின் செல்வன் திரைப்படத்தை லைகா நிறுவனத்துடன் இணைந்து மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனமும் தயாரித்துள்ளது.
தொடக்கத்தில், பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் கதைமாந்தர்களை அவ்வபோது போஸ்டராக இணையதளத்தில் படக்குழு வெளியிட்டு வந்தது. அதையடுத்து, வெளிவந்த பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் டீசர் மற்றும் பாடல்கள் ரசிகர்களிடம் கவனத்தைப் பெற்றன.
இதையும் படிங்க: ‘ரொம்ப பயமா இருக்கு’ – பொன்னியின் செல்வன் ரிலீஸ் குறித்து விக்ரம் பேச்சு!
இதன் தொடர்ந்து, சென்னை நேரு மைதானத்தில் மிகவும் பிரம்மாண்டமான முறையில் பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் ட்ரைலர் மற்றும் இசை வெளியீட்டு விழா நடைபெற அச்சமயத்தில் இந்தியா முழுவதும் பரபரப்பாக பேசப்பட்டது. பொன்னியின் செல்வன் பிரபலங்கள் செய்த புரோமஷனும் நன்றாகவே மக்களிடன் சென்று சேர்ந்தது.
இந்நிலையில், மிகவும் எதிர்ப்பார்க்கப்பட்ட பொன்னியின் செல்வன் திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளிவந்துள்ளது. பல திரையரங்குகளில் பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் காட்சிகளுக்கு முன்பாக செண்டை மேளங்களுடனும், ரசிகர்களின் ஆடல் ,பாடலும் இடம் பெற்றிருந்தது.
தற்போது, ரசிகர்களின் மிகுந்த ஆரவாரத்துடன் திரைப்படத்தை பார்த்து வருகின்றனர். கல்கியின் பொன்னியின் செல்வன் புதினத்தை தழுவி எடுக்கப்பட்டுள்ள திரைப்படமே பொன்னியின் செல்வன் என்பது குறிப்பிடத்தக்கது.